வேகத்தடையில் வர்ணம் வெள்ளை பூசாததால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

சாயல்குடி:

கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தடையில் வெள்ளை பூசாததால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.



சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பெருவாரியாக வேக தடைகள் உள்ளன. இந்நிலையில் சாயல்குடி நகர் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது இதுவரை வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் வேகமாக வரக்கூடிய டூவீலர் ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே கிழக்கு கடற்கரை சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடை உள்ள பகுதிகளில் ரிப்ளைக்டர் மற்றும் வெள்ளை வண்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement