அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
கும்மிடிப்பூண்டி, ஜூன் 13–
கும்மிடிப்பூண்டி அருகே அயநல்லுார் கிராமத்தில், வீடு மற்றும் கோவிலில் திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லுார் காமாட்சிபுரம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் மனைவி அமுதா, 43. முன்னாள் ஊராட்சி தலைவர். குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். பீரோவை உடைத்து, அதிலிருந்த, 2,000 ரூபாய், 500 கிராம் வெள்ளி பொருட்களை திருடினர்.
அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சுவர் ஏறி குதித்து, உண்டியலை உடைத்து, பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை திருடி சென்றனர்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement