தமிழக வளர்ச்சிக்கு சென்னையில் 2வது ஏர்போர்ட் கட்டாயம்: தொழில்துறை நிபுணர்கள் வலியுறுத்தல்
சென்னை: 'விமான நிலையம் என்பது கட்டமைப்பு திட்டம் மட்டும் அல்ல; தமிழகத்தின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான அத்தியாவசிய முதலீடு. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம்' என, தொழில்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தை, காலத்திற்கேற்ப விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் உள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் இரண்டாவது விமான நிலையத்தை, 5,600 ஏக்கரில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அரசு நிலம் போக, 3,700 ஏக்கர் விவசாய நிலங்கள் எடுக்க திட்டமிடப்பட்டு, இதுவரை, 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்பட்டு உள்ளன.
விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஜயின், த.வெ.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், விமான நிலைய பணிகள் தொடருமா, கைவிடப்படுமா, இடம் மாறுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், 'சூப்பர் சென்னை அமைப்பு' சார்பில், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தின் அவசியம் குறித்த கருத்தரங்கம், சென்னையில் நடந்தது. கருத்தரங்கில், நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணீந்திர ரெட்டி
உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு அடிப்படை விதி உண்டு. இருக்கும் இடத்தின் கொள்ளளவு 75 சதவீதத்தை எட்டும்போது, அடுத்தகட்ட விரிவாக்கத்தைத் தொடங்க வேண்டும்; 90 சதவீதத்தை அடையும்போது, அடுத்த திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, நாம் அந்த காலக்கெடுவைத் தவறவிட்டுவிட்டோம். ஆனால், இப்போது விழித்துக்கொண்டு, இரண்டாவது விமான நிலையத்திற்கான பணிகளைத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி. இது, அடுத்த 30 ஆண்டுகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும்.
விமான நிறுவன முன்னாள் தலைமை நிதிஅதிகாரி விஜய் கோபாலன்
ஒரு காலத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாகத் இருந்த சென்னை, இன்று போட்டியில் பின்தங்கியுள்ளது. பெங்களூரு போன்ற நகரங்கள், தனியார் நிர்வாகம் மற்றும் நவீன உள்கட்டமைப்பு மூலம், பெரிய ரக விமானங்களைக் கையாளும் வசதியைப் பெற்றுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை, விமானங்களை நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. விமான நிலைய சீரமைப்பு தற்காலிக தீர்வுதான்;நிரந்தரத் தீர்வல்ல. தமிழக தொழில் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம்.
கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிரீஷ் பாண்டியன்:
கடந்த 1950களில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி தொடங்கியபோது, விமான நிலையத்திற்கு மிக அருகில் தொழிற்சாலைகள் அமைப்பதையே, தொழில் முனைவோர் விரும்பினர்.
விமான நிலையம் நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்ததால், அருகில் இடங்களை அமைப்பது நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தது. மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, நாம் பின்தங்கிவிட்டோம்.
பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தின் தொழில் திறனையும், உழைப்பையும் நன்கு அறிந்துள்ளதால், இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். விமான இணைப்பு வசதிகள் சரியாக இல்லாததே, அவர்களை தயங்க வைக்கிறது. இரண்டாவது விமான நிலையம் காலத்தின் கட்டாயம்.
எஸ்.நடேசா அய்யர் லாஜிஸ்டிக் நிறுவன இணை பொது மேலாளர் கிருஷ்ணன்:
நகரின் மையப்பகுதியில் உள்ள விமான நிலையங்களால், எதிர்காலத்தில் இட நெருக்கடி ஏற்படும் என்பதை உணர்ந்து, மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இரண்டாவது விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாம் அந்த வாய்ப்பைத் தவறவிட்டோம். இப்போதாவது விழித்துக்கொண்டு, தொழில் வளர்ச்சிக்கு ஈடு தரும்வகையில், இரண்டாவது விமான நிலையத்தை, தமிழக அரசு விரைந்து அமைக்க வேண்டும்.
இவ்வாறு நிபுணர்கள் வலியுறுத்தினர்.
சுய புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை!
பரந்தூர் நிலம் ஒரு விவசாய பூமி என்பதால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கெட்டு விடும்.
ஆகவே, 15 வருடங்களுக்கு முன் போட்ட பழைய திட்டப்படி செங்கல்பட்டுக்கு அருகில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மாமண்டூர் - படாளம் பகுதி தான் சரியான தேர்வாக இருக்கும். ஈகோ பார்க்காமல் இதை செய்து முடிக்க வேண்டும். மீனம்பாக்கம் விமான நிலையத்தை எளிதில் அணுக முடியும். ஒட்டு மொத்த தென்மாவட்ட மக்களுக்கு
எளிதான ஒரு நுழைவு வாயிலாக இருக்கும்.
ஐயாநீங்கள் குறிப்பிடித்தும் இடம் i கல்பாக்கம் அணுநிலையம் அருகில் இருப்பதால் பாதுகாப்பு பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் உள்ளனர. . ஏற்க்கனவே சென்னையிலிருந்து செங்கிலெபெட் செல்ல 1 1/2 மணி நேரம்ஆகிறது. சாலைவழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லபவர்களை பற்றி கே சிந்தியுங்கள்.
அடுத்தவர்கள் பேச்சைக் கேட்காதவர்கள் என்று தானே அர்த்தம்?
யார் சொன்னது? தமிழக வளர்ச்சிக்கு அதிகமாக சினிமா தயாரிப்பாளர்கள் உருவாக வேண்டும் - தீம்க்காவுக்கு ஆதரவாக பணச்சலவை எளிதாக செய்யலாம். இதே கேள்வியை தீம்க்காவிடம் கேட்டால் டாஸ்மாக் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என்பார்கள். ஒரே ஒரு பேனா போதும் என்று கூட பதில் வரும்...
"நம்ம மந்திரி நம்ம தொகுதிக்கு நிறையச் செய்துள்ளார். இல்லையே அப்படி ஒன்றுமில்லையே. சரி, மந்திரி 300 கோடிக்கு காட்டிய வீடு எங்கு இருக்கிறது? நம் தொகுதியில். அப்படின்னா அவர் நம் தொகுதிக்குத்தானே செய்துள்ளார்?" என்பது போல், இது தமிழக வளர்ச்சிக்கு அல்ல. அதானி, அம்பானி, ஸ்டாலின், டி.ஆர். பாலு போன்ற பணக்கார தொழில் அதிபர்களுக்கு உதவியாய் இருக்கும்.
Green field Airport should not be built by swallowing acres of Green Fields and Water Bodies in Parantur is point raised by this CM. Some Political people already invested huge crores in and around paranthur area are only insisting this are. By acquiring few more acres backside to present airport , our CM will develop . Let us wait for a while
பரந்தூர் வெகு தொலைவு. 65 கி மி. ஏற்கனவே கிளாம்பாக்கம் வெளியூர் பஸ் நிலையம் 45 கி மி தொலைவு. எனவே பேசாமல் நமது தலைநகரை சென்னையில் இருந்து கிளாம்பாக்கத்துக்கும் பரந்துருக்கும் நடுவில் மாற்றி விடலாம்.
இந்த தொழில் துறை நிபுணர்கள் தங்களது தொழிற்சாலையில் ஒரு 100 சதுர அடி நிலத்தை அரசாங்கத்திற்கு கொடுக்க சொல்லுங்கள், குய்யோ முய்யோ என்று கதறுவார்கள். ஆனால் மற்றவர் நிலம் என்றால் அரசு கையகப்படுத்தலாம் என்பார்கள்.
it is better to use existing airport instead of going for second one as second one brought large scale public agitation.
it is better to provide parallel runway as many as possible for more flights take off / landing in the available present airport. Ultilise available free space efficiently with expert guidance.
முன்னர் போல ஓரிரண்டு விமானங்கள் இல்லை - இன்றைய நிலவரப்படி ஒரு மணிக்கு 54-60 விமானங்கள் தரையிறங்குகின்றன. ஒவ்வொரு முறையும் விமானம் மேலெழும்பும் பொழுதும் சத்தம் காதை கிழிக்கும். 110 டெசிபல் என்பது செயிண்ட் தாமஸ் மவுண்ட் பக்கம் சர்வசாதாரணம். ஆகவே ஊருக்குள் விமான நிலையம் என்பது கேவலமான காமடி.
50 கிலோமீட்டர் கூட தள்ளியிருக்கலாம் - ஆனால் நகரத்தின் முக்கிய பகுதியில் இருந்து வெகு வேக ரயில் போக்குவரத்து இருக்கவேண்டும். ஷாங்காய் போன்ற நகரங்களில் புல்லட் ரயிலை விட வேகமாக செல்லும் பறக்கும் ரயில் உண்டு. மக்கள் தொகை அடர்த்தியான நகரத்தில் பகுதியில் இருந்து 10 நிமிடத்துக்குள் விமான நிலையத்துக்கு வந்து விடலாம்.
அதனால் ஊழல் அரசியல்வாதிகளுக்கு என்ன பயன்?