குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப் படுகிறது. அதன்படி நேற்று திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா உறுதிமொழி ஏற்க செய்தார். இதில் பங்கேற்ற வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement