புகழிமலை கோவிலுக்கு சொந்தமான 34 சென்ட் நிலம் அதிகாரிகளால் மீட்பு
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
கரூர்
மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன்
பஞ்., அம்மாபட்டியில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி
கோவிலுக்கு சொந்தமான, 34 சென்ட் நிலம், தனியார் ஆக்கிரமிப்பில்
இருந்தது. இந்த நிலத்தை மீட்கும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை
அதிகாரிகள், சமீபத்தில் கரூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்து உத்தரவு பெற்றனர்.
இதையடுத்து, நேற்று
அம்மாபட்டியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான, 34 சென்ட் நிலத்தை,
ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையாளர் விஜயலட்சுமி தலைமையில்,
அதிகாரிகள் மீட்டனர். பிறகு, மீட்கப்பட்ட இடத்தில் புகழிமலை
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, சொந்தமான இடம் என போர்டு
வைக்கப்பட்டது. அப்போது, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
நந்தகுமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
'சும்மா இருக்கிறார்கள்' எனச் சொல்பவர்களை வாயடைக்க வைத்த அதிரடித்தீர்ப்பு
-
குன்னுார் - ஊட்டி பஸ்கள் 'கட்' நீண்ட நேரம் பயணிகள் பரிதவிப்பு
-
ஜாதி, மத அடையாளங்களுடன் கல்வி வளாகத்திற்குள் வர தடை அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
பைக் டாக்சிக்கு விதிகள் எப்போது? அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
-
கட்டுமான பொருள், சோலார் கண்காட்சி துவங்கியது
-
திமுக.,வில் இனி 10 துணை பொதுச்செயலர்கள்: ஸ்டாலின் புதிய முடிவு