'சும்மா இருக்கிறார்கள்' எனச் சொல்பவர்களை வாயடைக்க வைத்த அதிரடித்தீர்ப்பு
'வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மா இருக்கிறார்கள்' என்று சொல்பவர்களின் வாயடைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 'குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் வெறும் இல்லத்தரசிகள் அல்ல; அவர்கள் தேசத்தைக் கட்டமைப்பவர்கள். விபத்தில் அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால், மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுபவருக்குச் சமமாகக் கருதி இழப்பீடு வழங்க வேண்டும்' என நீதிமன்றம் பெண்களின் உழைப்பை அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த இல்லத்தரசிகள் நம்முடன் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
உச்சகட்ட நீதி
கீழ் நீதிமன்றங்களோடு இந்த வழக்கு முடிந்திருந்தால் வீட்டுத்தலைவியின் அருமை வெளியே தெரியாமல் போயிருக்கும். அடுத்தடுத்து மேல்முறையீடு செய்ததால்தான், உச்சநீதிமன்றம் பெண்களின் உழைப்புக்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த மெச்சத்தகுந்த நீதியை வழங்கியுள்ளது. கணவனுக்கும், குழந்தைகளுக்கும் இதுவொரு நிம்மதியான தீர்ப்பு.
- தமிழரசி: அருள்புரம்
பொருளாதார மதிப்பு
வீட்டை நிர்வாகிக்கும் பெண்களால் பொருளாதார ரீதியாக எவ்வித வருமானமும் இல்லை என ஒற்றை வார்த்தையில் குறைத்து மதிப்பிடுவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. வெறும் இல்லத்தரசி என்று சுருக்காமல், அவர்கள் குடும்பத்திற்குத் தரும் அரவணைப்பும் உழைப்பும் 'விலைமதிப்பற்ற பொருளாதார மதிப்பு' கொண்டது என்பதை நீதிமன்றம் இன்று சத்தமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
- நந்தினி, காலேஜ் ரோடு.
புதிய கவுரவம்
இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு மனித மூலதனமே முக்கியம். அதை உருவாக்குவதே பெண்கள்தான். ஆனால், பொருளாதார கணக்கெடுப்பில் பெண்களின் பங்கு 'பூஜ்ஜியம்' எனக் கருதப்பட்டது கவலையளித்தது. பஞ்சாப், ஹரியானா நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால், இன்று பெண்களுக்குப் புதிய கவுரவம் கிடைத்துள்ளது.
- ராணி, வ.உ.சி. நகர்.
இயந்திர எரிபொருள்
கோர்ட் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை; பல ஆண்டுகளாக நாங்கள் எதற்காகப் புலம்பி, கேட்டு வந்தோமோ அதை இன்று நீதியாக மாற்றியிருக்கிறது. இல்லத்தரசிகளின் 24 மணி நேர உழைப்புதான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார இயந்திரத்திற்கும் எரிபொருள்! இத்தீர்ப்பு விபத்து இழப்பீடு வழக்குகளுக்குப் பெரிய வழிகாட்டியாக அமையும்.
- ஷர்மிளா, ராக்கியாபாளையம்.
பெரும் ஆறுதல்
சில ஆண்கள் 'உங்க மனைவி என்ன செய்கிறார்?' என்று கேட்டால், 'வீட்டில் சும்மா தான் இருக்கிறாள்' என அசால்ட்டாகச் சொல்வார்கள். நாட்டின் சேமிப்பு வரை பெண்களின் பங்கு எவ்வளவு தெரியுமா? உழைப்புக்கு ஊதியமும் அங்கீகாரமும் தேடிய பெண்களுக்கு, இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய ஆறுதலாகவும், புதிய வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.
- பானுமதி, கருவம்பாளையம்.
மறைந்தும் காப்பவள்
ஒரு குடும்பத் தலைவியின் இழப்புக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் கணக்கிட்டு இழப்பீடு வழங்குவது ஆறுதல் தரக்கூடியதொரு தீர்ப்பாகும். ஒரு தாய் உயிரிழக்கும் போது, பிள்ளைகள் தங்களின் கண்ணியமான எதிர்கால வாழ்க்கை, சமூகப் பாதுகாப்பு, கல்வி பெறும் உரிமை, அன்பான உபசரிப்பு மற்றும் தாயின் அரவணைப்பு எனச் சகலத்தையும் இழந்து தவிக்கிறார்கள். 'அண்ணன், தம்பி போனால் பலம் போனது' என்பார்கள்; ஆனால் 'மனைவியை இழந்தால் சகலமும் போய்விட்டது' என்பதே யதார்த்தம்.
இந்தத் தேசம் எப்போதும் இளமையோடு இருக்கவும், மனித வளம் காக்கப்படவும் பெண்கள் எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். இருந்தபோதிலும், இன்னும் பெண்கள் தங்களின் உரிமைகளைப் பெறப் போராட வேண்டிய நிலையே நீடிக்கிறது. தன் வாழ்நாளில் குடும்பத்தினரின் அனைத்துச் சுக துக்கங்களையும், வலி வேதனைகளையும் தாங்கிக் கொண்டு குடும்பத்தைப் பாதுகாத்த ஒரு பெண், தன் மறைவுக்குப் பின்பும் இந்தத் தீர்ப்பின் மூலம் குடும்பத்தைப் பாதுகாக்கிறாள் என்பதற்கு அடையாளம் தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
- நதியா, மாநிலத் துணைச் செயலாளர்
சமூக உடைப்பு
ஆண்கள் அல்லது அரசு வேலையில் இருக்கும் பெண்கள் விபத்தில் இறந்துவிட்டால், அவர்களது ஊதியத்தைக் கணக்கிட்டு உடனடியாக இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், காலையிலிருந்து இரவு வரை அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து, குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்களுக்கு எவ்வித ஊதியமும் இல்லாமல், அங்கீகாரமும் இல்லாமல் 'இல்லத்தரசி' என்ற ஒற்றை வரியில் அவர்களை முடக்குவதே நம் சமூகத்தின் வழக்கமாக உள்ளது. அப்படி காலங்காலமாக மாறாமல் இருக்கும் தப்பான சமூகக் கட்டமைப்பை உடைத்தெறிவதே இந்த வரலாற்றுத் தீர்ப்பு.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வெறும் 'இல்லத்தரசிக்குக் கிடைத்த இழப்பீடு' என அலட்சியமாகக் கருதாமல், ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த உழைப்பிற்கும், உரிமைக்கும் கிடைத்த நீதியாகப் பார்க்க வேண்டும். தீர்ப்பு என்ற ஒற்றை வார்த்தையை விட, நாற்புறமும் சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்து அனுதினமும் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் வியர்வைக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உயரிய அங்கீகாரம் இது. நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதால், வரும் காலங்களில் விபத்து இழப்பீடு சார்ந்த பல்வேறு வழக்குகளுக்கு இதுவொரு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும், நல்லதொரு தீர்வாகவும் அமையும் என உறுதியாக நம்பலாம்.
- பவித்ராதேவி, மாவட்டத் தலைவர்.
இல்லத்தரசிகளின் அயராத உழைப்பினையும் தியாகத்தையும் அவர்களுடைய சமுதாய பங்களிப்பினையும் பாராட்டி அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது
This is not fair out and out materialistic looks at marriage as a business proposition agreed women are doing a noble job you cannot quantify it with thirty thousand rupees will more unrest unhappiness in families.Are men useless only to go out and slog and earn for the family sacrificing his personal life highly discriminatory
.
பெண்களால் அழிந்த குடும்பங்கள் அதிகம் . ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்கள் அழிக்காமல் காத்துவந்த குடும்ப கட்டமைப்பை கடந்த 30/40 ஆண்டுகளில் பெண்கள் அழித்துவிட்டனர் என்பதுதான் நிஜம் . நேரம் காலம் பார்க்காமல் ஆண்கள் உழைப்பது பெண்களையும் உட்படுத்திய வாழ்க்கை வாழ்வதற்காகத்தான் .
சும்மா இருக்கிறார்கள் என்று சொல்வது தவறு. "Home maker", "ஹவுஸ் மேனேஜர்", "குடும்ப மேலாளர்" என்று கூறலாம். ஆனால் இந்த விஷயத்தில் குடும்ப நிர்வாகத்தில் ஆண்களுக்கும் சம/அதிக பங்கு இருக்கிறது என்பதே உண்மை. அதனால் "இணை/துணை குடும்ப நிர்வாகி" Deputy Family Manager என்று கூறுவது நன்றாக பொருந்தும்.
ஆனால், இந்த விஷயம் எல்லாம் நமது குடும்பம், நமது வாழ்க்கை என்று தெரிந்து, புரிந்து நடந்து கொள்ளும், ஆணுக்கும், பெண்ணுக்கும் மட்டுமே பொருந்தும். உண்மை என்ன? யதார்த்தம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். எத்தனை குடும்பங்கள் பெண்களால் கெட்டது என்று கணக்கு எடுக்காமலே தெரியும். எத்தனை மனைவிகள் கணவனோடும், குடும்பத்தோடும் வாழ்ந்தாலும், தங்கள் வீட்டு ஆள்களுக்கும் கணவனுக்கும் பிரச்சினை என்று வந்தால் கணவனை எப்படி எல்லாம் பாடுபடுத்துவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஏற்கனவே குறிப்பாக நகையின் பேரில் கடன் தரும் வங்கிகள் வருமான வரித்துறை சொல்வதாக பெண்களுக்கும் வருமான வரிக் கணக்கு அட்டை வேண்டும் என்கிறது. இந்தத் தீர்ப்பை வருமான வரித்துறை உடனடியாக ஒப்புக் கொண்டு இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாதம் 30 ஆயிரம் வருமானம் வருவதாக கணக்கிட்டு வருமான வரி போடுமோ
வருட வருமானம் 4 லட்சத்துக்குக்கீழ் வருவதால் வருமான வரி இல்லை
தினமலரே இந்த அருமையான கட்டுரைக்கு நீ தந்திருக்கும் "தசாவதானி எனும் குடும்பத் தலைவி" படம் அருமையான மிகப் ஒருத்தமான படம் ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
திருமணம் ஆகும் வரை தன் பிறந்த வீட்டில் "மகள்" என்று செல்லமாக வளர்ந்தவள், திருமணமான மறுகணத்திலேயே மனைவி, மருமகள், அண்ணி, கொழுந்தி, தாய் என்னும் தானியங்கி உறவுகள் அனைத்தும் அவளுக்குப் பொறுப்பாக வந்து விடுகின்றன
உடனே அவள், தாரம், சமையல்காரி, தாதி, மருத்துவச்சி, சலவைத் தொழிலாளி, வீட்டு வேலைக்காரி, துப்புரவுப் பணியாளி, உடல்நல ஆலோசகர், மனநல ஆலோசகர், நிதி அமைச்சர், குழந்தைகள் பராமரிப்பாளர், பாதுகாவலர், எடுபிடி வேலையாள், உறவினர் பொறுப்பாளர், குழந்தைகள் ஆசிரியர், குடும்ப வழிகாட்டி, பெண்குழந்தைகளுக்குத் தோழி, மாமனார் மாமியாருக்குத் தாதி - - - - என்று குடும்பத்த தலைவியின் பின் இணைப்புக்களையும் எடுத்து மாட்டிக் கொள்கிறாள்
தன் வேரடி மண்ணான பிறந்தகத்தை அடியோடு வெட்டி விட்டு இத்தனை சுமைகளை ஏற்றுக் கொள்கிறாள்
இவற்றிற்குப் பயிற்சி பட்டயம் பட்டம் உதவித் தொகை என்று ஒரு துளியும் கிடையாது
இதற்கெல்லாம் ஒரு ஆலோசனை நிபுணர் என்ற அளவில் மட்டும் அவள் இருந்தால் கூட, ஒரு குடும்பத் தலைவனால் "சம்பளம் தந்து ஈடு செய்ய முடியுமா ?
குடும்பத் தலைவியுடைய இத்தனை சுமைகளையும் அந்தப் படம் தெளிவாக விளக்குகிறது
அவர்களின் மதிப்புக் குறைவாகக் கணக்கிடப் படுகிறது அல்லது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதே இல்லை அதை மாதம் முப்பதாயிரம் ரூபாய்கள் வரை குறைத்த பட்சமாக எடுத்துக் கொண்டு கணக்கிட வேண்டும்" என்று ஒரு மனிதாபிமானம் மிக்க வழிகாட்டுத் தீர்ப்பைத் தந்திருக்கும் போது
இதுவரை அங்கீகாரம் இல்லை என்பது போன்ற ஒரு அங்கலாய்ப்பு மோசமானது. கிட்டத்தட்ட 99.9% வீடுகளின் தியாகங்கள் செய்யத்தயங்காத தாய்க்குலங்களின் முழு கட்டுப்பாட்டில்த்தான் இயங்குகின்றன.
ஒருவேளை அவர்கள் சுயநலவாதிகளாக மாறினால் இது போன்ற தீர்ப்புகள் செல்லும். எத்தனை பேர் தங்களது அம்மாவின் சுயநலத்துக்கு பலியானார்கள் என்று பட்டியலிட்டால் உண்மை புரியும்.
வீட்ல ஹவுஸ் வைப் ஆக சும்மா இருக்காங்க. இதை சொல்வது எளிது. மனைவி குடும்ப தலைவி என்பவரின் பொறுப்புகள் என்பது குடும்பத்தை கட்டமைப்பது மட்டும் அல்ல. நாட்டின் பொருளாதாரமும் பெண்களால்தான் கட்டமைக்கப்படுகிறது.
குறிப்பாக இல்லத்தரசிகள் அவர்கள் நினைத்தால் ஊதாரிதனமாக செலவழித்து கணவனை கடனாளியாக நடுத்தெருவில் நிறுத்த முடியும். அதுவே நல்ல இல்லத்தரசியாக இருந்தால் சிக்கனமாக சேமித்து குடும்பத்தை நல்ல நிலையில் கரை சேர்க்க முடியும். இந்த காலத்து பெண்கள் தானும் வேலை பார்த்து சமையல் செய்வது வீட்டை சுத்தமாக வைப்பது துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளையும் பார்த்து மிகசிறந்த பணியை செய்கிறார்கள்.
30000 என இவர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்வது மிக குறைவு என்றாலும் இதை ஒரு அங்கீகாரமாக நீதிமன்றம் தந்துள்ளது இல்லத்தரசிகளை பெருமைபட வைக்கும்
இந்த 30000 ரூபாய் என்பது விபத்து இழப்பீடுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மையான மதிப்பு அதிகமாகவே இருக்கும்
தொடர்கிறது ... எல்லா பணிகளையும் செய்யும் பெண்களுக்கான மரியாதை என்னமேலும்
-
இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்; காலனித்துவ ஆட்சி கால மரபுகள் நீக்கம்
-
திறந்தவெளியில் கழிவுநீர்
-
கள்ளக்குறிச்சியில் காவலர் சமுதாய கூடம் அமைக்கப்படுமா?
-
தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருவதால்... வேதனை! மும்முனை மின்சாரம் பற்றாக்குறையால் அவலம்
-
ஆன்மிக சிந்தனை கொண்டவர்களை அறங்காவலராக நியமிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
-
பள்ளி அருகே மதுபானக்கடை