பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
- நமது நிருபர் -
தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தது குறித்து ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் அளித்த அறிக்கையில், 'பினாமி பெயரில் 'கான்ட்ராக்ட்' எடுத்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3,000 பக்க அறிக்கையில், குழுக்கள் அளித்த சில பரிந்துரைகள்:
* வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதோடு, உட்கட்சி பிரச்னையை தொடர விடாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பகுதிகளில் அரசு 'கான்ட்ராக்ட்' பணிகளை, பினாமி பெயரிலும், சிண்டிகேட் அமைத்தும் எடுத்துள்ளனர். அவர்கள் யார் என்பதை பட்டி யலிட்டுள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஒன்றிய செயலர்களிடம் தேர்தல் பணிக்காக வழங்கிய பணத்தை சுருட்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க தயங்கினால், அதே தவறுகள் தொடரும் வாய்ப்புள்ளது
* இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கும் ஒன்றிய செயலர்களை மாற்ற வேண்டும்.
* சத்துணவு பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர் நியமனங்களுக்கு, கட்சியினர் பரிந்துரையை நிராகரித்த மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் உற்சாகமாக பணியாற்றும் வகையில் கட்சியை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆட்சியில் இல்லாத 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டு கால அகோரப்பசியை, திமுக 2021 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ஊழல் வழிகளைப் பயன்படுத்தி, கோடிகளை குவித்து தீர்த்து கொண்டது. இதனால் திமுக மீது ஏற்பட்டுள்ள மக்களின் அளப்பரிய வெறுப்பு குறையும் வரை, திமுக வாயை திறக்காமல் இருப்பதே நல்லது.
சென்னை சாக்கடைகள் எங்கிருந்து ஆரம்பித்தாலும் எங்கெங்கெல்லாம் ஓடினாலும் முடிவில் அனைத்தும் சங்கமிப்பது கூவத்தில்தானே. இதை கண்டுபிடிக்க ஒரு குழு தேவையா. அந்த குழு தரும் அறிக்கையை படித்துதானா அதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக காசும் தலைமைக்குத் தானே வந்தது
3000 பக்க அறிக்கையை படித்து புரிந்து செயல் படுத்த எவ்வளவு வருடம் பிடிக்குமோ
அட பாவமே. 5 வருடகாலமாக சாட்டையை சுழற்றி சுழற்றி ஒய்ந்து பலவீனமாக உள்ள ஒரு முதியவரை மறுபடியும் சாட்டையை சுழற்ற சொல்லுகிறீர்களே . இது அடுக்குமா. ? பூட்டிய இரும்பு கரமும் துரு பிடித்து வீணாகிவிட்டது. புது கை செய்து பொருதினாலும் கையை தூக்கமுடியுமா என்று இந்த குழுக்கள் சிந்திக்கவேண்டும். நடைமுறைக்கு ஒத்துவரும் ஆலோசனை இருந்தால் துண்டு சீட்டில் எழுதிக்கொடுங்கள். அதை விடுத்தது ........
மூவாயிரம் பக்க அறிக்கை கொடுத்தால் எப்படி படித்து எப்போது படித்து எப்போது நடவடிக்கை எடுப்பது?
சத்துணவு பணியாளர் ரேசன் கடை பணியாளர் தேர்வு செய்ய கீழ் மட்டம் மேல்மட்டம் இவர்கள் அரசு அதிகாரிளா
திமுக மாஜிக்களாகட்டும் .... அவர்களது பினாமிகளாகட்டும் .... சம்பாதிக்கும் எதிலும் தலைமைக்கு கட்டிங் கொடுக்காமலா சம்பாதித்தார்கள் ????
No allies, no minority votes. DMK is dead and gone. Local body elections will be the final nail in the coffin.
Yes sir .. outstanding comments...