தபால் ஒய்வூதியர் குறைதீர் கூட்டம்

கோவை: கோவை கோட்ட அளவிலான தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் 29ம் தேதி மாலை 3.00 மணிக்கு, கோவை தலைமை தபால் நிலையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள முதுநிலை  தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. குறைகள் அல்லது கோரிக்கைகள் உள்ள  ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கலாம்.

புகார்களை, ‘முதுநிலை தபால் கண்காணிப்பாளர், கோவை கோட்டம், குட்செட் ரோடு, கோவை- 641001’ என்ற முகவரிக்கு 20ம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும். docoimbatore.tn@indiapost.gov.in என்ற இ-–மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என தபால் துறை தெரிவித்துள்ளது.

Advertisement