ஆன்மிக சிந்தனை கொண்டவர்களை அறங்காவலராக நியமிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை

2



நமது நிருபர்




'அறங்காவலர் பதவி காலியாக உள்ள கோவில்களில், ஆன்மிக சிந்தனை கொண்டவர்களை நியமிக்க வேண்டும்' என்று, ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள, 214 கோவில்களில் பரம்பரை வழி சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் அறங்காவலர் என்பவர் திருப்பணிகள், நிதிநிலை, அடிப்படை வசதிகளை முறையாக கவனிப்பவராக இருக்க வேண்டும்.

ஆனால், பல கோவில்களில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கோவிலின் மரபுகள், பூஜை முறைகள் பற்றி தெளிவில்லை. இவ்விஷயத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாமல், லஞ்சத்தை புறந்தள்ளி அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

நாத்திகவாதிகள், குற்றப்பின்னணி கொண்டவர்கள், நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களை நிச்சயமாக நியமிக்க கூடாது. கோவில்கள் என்பது கலாசார மையம். எனவே, கலாசார மரபுகளை உணர்ந்தவர்கள், சமுதாய சேவை பணியில் ஈடுபட்டு வருகிறவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement