அரசியல் உள்நோக்கம் கொண்டவை; பாகிஸ்தான் அதிபருக்கு இந்தியா கடும் கண்டனம்

11


புதுடில்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் நடத்தப்படும் விதம் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அதிபர் தெரிவித்த ஆதாரமற்ற கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. எப்படியாயினும், இந்தியாவின் உள்விஷயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

உலகளாவிய விவாதத்திற்குரிய நாடாக விளங்கும் பாகிஸ்தான், மனித உரிமைகள் விஷயத்தில் மோசமான வரலாற்றை கொண்டு இருக்கும் போது, ​​இந்தக் கருத்துக்கள் குறிப்பாக அபத்தமானவை. பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரைத் திட்டமிட்டுக் குறிவைத்து, அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் பாகிஸ்தானின் நீண்டகால வரலாறு மிகவும் பெயர்போனதாகும்.

இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அதிபரின் கருத்துக்கள், பாகிஸ்தானின் மதவெறி மற்றும் வெறுப்பு நிறைந்த தேசியக் கொள்கைகளால் தூண்டப்பட்ட ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

Advertisement