நீட் தேர்வில் 658 பேர் ஆப்சென்ட்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த நீட் தேர்விற்கு 2222 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 658 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 637 ஆண்கள், 1585 பெண்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கடந்த மே 3 நடந்த தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையம் அருகே சந்தேகப்படும் படி நிற்கும் நபர்கள், நீண்ட நேரம் நிற்கும் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு எழுத 476 ஆண்கள், 1088 பெண்கள் என 1564 பேர் மட்டும் வந்திருந்தனர். 161 ஆண்கள், 497 பெண்கள் என 658 பேர் தேர்வு எழுதவில்லை. கடந்த மே 3 ல் நடந்த நீட் தேர்வில் 105 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில், தற்போது மறுத்தேர்வில் 658 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
மேலும்
-
அபாயம் மானாமதுரை ரயில் கேட் ரோட்டில் பெரும் பள்ளம் தினசரி வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும்
-
தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு