தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், உரித்த தேங்காய், உரிக்காத தேங்காய், கொப்பரைக்கு நிரந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த அரசு 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தினர் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அம்சராஜன், கண்ணன், ராஜப்பன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement