வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
சூளகிரி; பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் திரிபுவன்குமார், 26. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்ப-டியில் உள்ள, 'மகாலட்சுமி புளு மெட்டல்' என்ற நிறுவன கல்குவாரியில், வெல்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த, 20ம் தேதி இரவு தன் நண்பருடன் மது அருந்தினார். இரவு, 11:25 மணிக்கு, அவரது நண்பர் சோனு என்பவர், சப்படியில் உள்ள சாதப்பா என்பவரது நிலத்தின் அருகே திரிபுவன் குமாரை இறக்கி விட்டு சென்றார்.
இயற்கை உபாதையை கழிக்க சென்ற அவர், அப்பகுதியில் மின்சாரம் கசிந்து கொண்டிருந்த கம்பியை பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்-பவ இடத்திலேயே பலியானார்.
சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு
Advertisement
Advertisement