ஹைதராபாத்தில் உதயமானது 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ'!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா ரைசிங் மாநாட்டின் போது, இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மையில் ஹைதராபாத்தின் அதிகரித்து வரும் பங்கின் அடையாளமாக அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை ஒரு சாலைக்கு சூட்டுவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
அதன்படி, ஹைதராபாத்தின் நிதி மாவட்டமான நானக்ராம்குடாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஒட்டியுள்ள ஒரு முக்கிய சாலைக்கு, 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சுயில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் தெலுங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாநிலத் துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா, "ஹைதராபாத் குடும்பங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா என்பது வரைபடத்தில் உள்ள ஒரு நாடு மட்டுமல்ல. அது பாஸ்டனில் இருக்கும் ஒரு மகன், நியூ ஜெர்சியில் இருக்கும் ஒரு மகள், சீட்டில் இருக்கும் ஒரு நண்பன் ஆகும். 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்ற பெயரிடுதல் வெறும் சடங்கு ரீதியான சாலைப் பலகையாக மட்டும் அல்ல. இந்த சாலை மாணவர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், குடும்பங்கள் மற்றும் கனவு காண்பவர்களின் பல பயணங்களைச் சுமந்து செல்லட்டும்," என்று அவர் கூறினார்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக உயிர் துறந்த ஒரு தியாகியின் பெயரை வைத்திருந்தால் நாம் மிகவும் சந்தோஷப்பட்டிருப்போம். தியாகிகளின் பெயர் எல்லாம் எங்கே நினைவுக்கு வரும்?
மிக அதிக அளவில் மோசடி செய்து அமெரிக்கா வருவது தெலுங்கானா மாவட்ட மக்களே...
பேச்சு தான் அதானி அம்பாநீ .. ஆனால் செய்வதோ அமெரிக்கா சர்வாதிகார டிரம்ப் எனும் ஆளை. எவ்வளவு கேவலம் மற்றும் நாட்டை இழிவாக நடத்தும் செயல். மக்கள் இந்தமாதிரி பசங்களை மன்னிக்கவே மாட்டார்கள்.
Congress trying to get close to Trump
வெட்கமில்லையா
ஒரு முறை டிரம்ப் அவர்கள் கூறினார்கள் பொதுவாக இந்தியர்கள் எப்படி அமெரிக்கா வருகிறார்கள் வந்து குடி உரிமை பெறுகிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கிறேன். அமெரிக்கா இயங்க இந்தியர்களின் உழைப்பு வேண்டும். இந்தியர்கள் இல்லை என்றால் அமெரிக்காவில் இயல்பு இல்லை இருக்காது என்று நினைக்கிறன்
அமெரிக்காவில் H1 விசா மோசடி செய்வதில் 75 சதவீதம் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். எட்டாம் கிளாஸ் படித்துவிட்டு பொய் பித்தலாட்டம் செய்து அமெரிக்கா சென்று விடுவர். நல்ல வரதக்ஷணை .
ட்றம்பை குஷிபடுத்த இத்தாலியர்களின் எடுபிடி ரேவந்த் ரெட்டி செய்த வேலை.
ஏன் சகோ, இவ்வளவு காண்டு ஆகிறீங்க?
loosu pasangaமேலும்
-
அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்: இஸ்ரேல் அமைச்சர் பிடிவாதம்
-
திரிணமுல், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பிக்கள் கட்சிதாவல் விவகாரம்: விரைவில் சபாநாயகர் முடிவு
-
பனிக்காலம் முடிந்து வசந்த காலம்; வைகோ சூசகம்
-
சராசரியாக படிக்கும் மாணவரையும் அரவணைத்து செல்லுங்கள்; ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
-
குற்றத் தடுப்புக்குஆல்பா டீம்
-
அதிகாரிக்கு அபராதம்