வீட்டுக்குள் சிறுத்தையை சிறை பிடித்த கில்லாடி நபர்
மசினகுடி: நீலகிரி மாவட்டம், மசினகுடி, செல்வப்பா காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், நேற்று முன்தினம், இரவு, 9:30 மணிக்கு, குடும்பத்தினருடன் வீட்டில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை விரட்டியது. நாய், வீட்டில் உள்ள ஓர் அறைக்குள் ஓடியது. சிறுத்தையும் தொடர்ந்து, அந்த அறைக்குள் சென்றது.
சுதாரித்த சிவக்குமார், உடனடியாக ஓடிச்சென்று, அந்த அறை கதவை மூடி, வெளிப்பக்கமாக தாழிட்டு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
மசினகுடி வனத்துறையினர், கூண்டு வைத்து, சிறுத்தையை பிடித்து, ஐந்து மணி நேர போராட்டத்திற்குபின், சிறுத்தையை, சீகூர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
தான் சிறைப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுத்தை, அறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில், நாயை கொல்லாமல் விட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement