சந்தை வளாகத்தில் துாய்மை அவசியம்

ஓமலுார்; ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி சந்தை வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.

அப்பள்ளியை சுற்றி ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டு வருவதால், சுகாதாரம் பாதிக்கப்ப-டுகிறது. சில நேரங்களில் குப்பைக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், மாணவ, மாணவியர், மூச்சுத்-திணறலுக்கு ஆளாகின்றனர். மேலும் கால்நடை மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. ஊராட்சி அதிகாரிகள் சந்தை வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement