நவீன தொழில்நுட்பம் கடைப்பிடிக்க அறிவுரை

தலைவாசல்; தலைவாசல், பட்டுத்துறையில், வேளாண் துறை மற்றும் 'அட்மா' திட்டம் சார்பில், மக்காச்-சோள பயிரில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.


வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமை வகித்து பேசுகையில், ''விவசாயிகள் பாரம்பரிய முறைகளை தவிர்த்து, வேளாண் துறை ஆலோசனை பெற்று, நவீன தொழில்நுட்-பங்களை கடைப்பிடிப்பதால் சாகுபடி செலவை குறைத்து, நிகர லாபத்தை அதிகரிக்க செய்ய முடியும். படைப்புழு கட்டுப்படுத்தல், கோடை உழவு முக்கியத்துவம், இனக்கவர்ச்சி பொறி அமைத்தல், மகசூல் தரும் வீரிய ரக விதைகள் நடவு செய்தல் வேண்டும்,'' என்றார்.வேளாண் விஞ்ஞானி வேல்முருகன், 'அட்மா' திட்ட மேலாளர் சக்தி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், வேளாண் அலுவலர்கள், விவ-சாயிகள் பங்கேற்றனர்.


Advertisement