ஊத்தங்கரையில் எஸ்.பி., ஆய்வு

ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் மாவட்ட எஸ்.பி., அனிதா சாலைகளில் நடந்து சென்று கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., அனிதா, ஊத்தங்கரை ரவுண்டானா, அண்ணா சிலை சந்திப்பிலிருந்து மெயின் ரோடு, கல்லாவி சாலை ஆகியவற்றின் வழியாக நடந்து சென்று கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.அதேபோல் பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து நேரில் விழிப்புணர்வை ஏற்ப-டுத்தினார். பின்னர் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆய்வு பணி மேற்-கொண்டார். அவருடன் ஊத்தங்கரை டி.எஸ்.பி., ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் உடன் சென்றனர்.

Advertisement