மதுபாட்டில் விற்ற இருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, உலகங்காத்தான் டாஸ்மாக் கடை அருகே, தென்கீரனுாரை சேர்ந்த தடிகாரன் மகன் கரன், 24; மாரியாப்பிள்ளை மகன் வினோத், 25; ஆகிய இருவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. கரன், வினோத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement