கடத்துாரில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு

1

பாப்பிரெட்டிப்பட்டி; கடத்துாரில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூ-ழலை பாதிக்கும், 40 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை உள்ளது. அதன்படி பேரூராட்சி பகுதிகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள், விற்பனை செய்பவர்களுக்கு அப-ராதம் விதிக்கப்படுகிறது.


ஆனால், கடத்துார் பேரூராட்சியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.பல கடைகளில் தடைசெய்யப்பட்ட கேரி பேக், பிளாஸ்டிக் கப் போன்றவற்றின் பயன்பாடு குறையாமல் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் பேரூராட்சியின் பல பகுதிகளில், பிளாஸ்டிக் குப்பை அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் குப்பையை சிலர் எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிக்கும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் வலியு-றுத்தி உள்ளனர்.

Advertisement