தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

மதுக்கரை: மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு துவங்கிய வேள்வி, 9:00 மணிக்கு நிறைவடைந்தது.

தொடர்ந்து தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், விபூதி அலங்கார பூஜை நடந்தன. மேலும் நேற்று பவுர்ணமி தினம் என்பதால், காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement