தேசிய நெடுஞ்சாலையில் பூத்து குலுங்கும் மலர்கள்
தர்மபுரி; தர்மபுரியிலிருந்து, ஓசூர் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை கடந்தாண்டு, 80 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பொது போக்குவரத்திற்கு சாலை திறக்கப்பட்டது. தற்-போது, ஒருசில இடங்களில் மட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை நடுவே, தர்மபுரி அடுத்துள்ள சோகத்துார், கடகத்துார், அல்லியூர், புலிக்கரை, சோமனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில், சாலை பராமரிப்பு குழுவின் சார்பில், அலங்கார பூச்செடிகள், மருதாணி, அரளி போன்-றவை நட்டு வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால், இச்செடிகள் அனைத்தும் தற்போது, பூத்து குலுங்கி வருகிறது. இவை, வாகன ஓட்டிகளின் கண்களை கவர்ந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement