ஏர்போர்ட்டில் ரூ.56 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில், 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய்க்கு, இரு நாட்களுக்கு முன் காலை 9:30 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது.
இதில் பயணம் செய்ய, தமிழகத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் வரிசையில் காத்திருந்தார். அவரது உடைமைகள் சந்தேகிக்கும்படி இருந்தன. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சோதனை செய்ததில், கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி கட்டுக்கட்டாக இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு 56 லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடு நீக்கம்: பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு
-
பிரேசில் 'திரில்' வெற்றி: ஜப்பான் அணி ஏமாற்றம்
-
மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட குழு: அரசு உத்தரவு
-
ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா? திமுக தலைமை திடீர் ஆலோசனை
-
ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடக்க முதல்வர் விஜய் உத்தரவு
-
'முதலில் அடிப்படை வசதி; பின், கட்டண உயர்வு'
Advertisement
Advertisement