ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா? திமுக தலைமை திடீர் ஆலோசனை
சென்னை: சிறுபான்மையினர் ஓட்டுகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மாறியுள்ளதால், ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா என, தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
திராவிடர் கழகத்திலிருந்து உருவான தி.மு.க., ஹிந்து மத எதிர்ப்பு அரசியலை பின்பற்றி வருகிறது. அதன் வாயிலாக, சிறுபான்மையினர் ஓட்டுகளை மொத்தமாக அள்ளி வந்தது.
கடந்த 1999 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தபோது, சிறுபான்மையினர் ஓட்டுகளில் ஒரு பகுதியை இழந்தாலும், பெரும் சேதாரத்தை தி.மு.க., சந்திக்கவில்லை.
ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., ஆட்சி அமைத்ததோடு, தமிழக அரசியலே தலைகீழாக மாறியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் வென்ற காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், த.வெ.க., பக்கம் சென்று விட்டன.
கடந்த 60 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்த முஸ்லிம் லீக், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது, அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், 'த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிக்க சொல்லி, முஸ்லிம் சமூகத்திலிருந்து எங்களுக்கு பெரும் அழுத்தம் வந்தது. முதல்வர் விஜய்க்கான முஸ்லிம்களின் ஆதரவு குரல் என் வாழ்நாளில் பார்த்திராதது' என்றார்.
இதனால், சிறுபான்மையினர் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு இனி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், வரும் 2029 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, இதுகுறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர், முக்கிய நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கிறிஸ்துவர் ஓட்டுகளில் 80 சதவீதம், முஸ்லிம் ஓட்டுகளில் 50 சதவீதத்தை இழந்ததால் தான், இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாத நிலை தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது.
கட்சிக்கு தோல்வி என்பது புதிதல்ல. ஆனால், தி.மு.க.,வின் அடிப்படை ஓட்டு வங்கியான சிறுபான்மையினர், பட்டியலின மக்களின் ஓட்டுகளை இழப்பது, இதுவே முதல்முறை.
சிறுபான்மையினர் தற்போது விஜயை முழுமையாக நம்புகின்றனர். எந்தச் சூழலிலும், தி.மு.க.,வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாத, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், 'த.வெ.க., அரசே சிறுபான்மையினருக்கான அரசு; அதை காப்பாற்ற வேண்டும்' என்கிறார்.
அதேபோல, தி.மு.க.,வுக்கு எதிராக காதர் மொகிதீன் பேசுவார் என்பதை ஸ்டாலின் கனவிலும் நினைக்கவில்லை.
சிறுபான்மையினர் ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு மாறிய நிலையில், ஹிந்து மத எதிர்ப்பு அரசியலை தொடர்வது, அண்ணாமலைக்கு சாதகமாகி விடும். எனவே, ஹிந்து மத எதிர்ப்பு அரசியலை கைவிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல மென்மையான போக்கை கையிலெடுக்கலாமா என்பது குறித்து தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது. இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின், தி.மு.க.,வின் போக்கில் பெரும் மாற்றம் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (66)
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
30 ஜூன்,2026 - 15:17 Report Abuse
சிறுபான்மை வோட்டுகள் லாட்டரி கட்சியிடம் சென்றது நிரந்தரம் என்று கிடையாது ......இந்த சிறுபான்மை இப்பொது லாட்டரி கட்சி .....பிறகு பச்சோந்தி போல நிறம் மாற்றி அங்கு லாபம் இல்லை என்றால் பிறகு மீண்டும் விடியலுக்கு .....இதன் மூலம் அவர்கள் மத சார்பின்மை சாயம் வெளுக்கும் ...விடியல் சமூக நீதி மத சார்பின்மை கொள்கை சாயமும் நன்கு வெளுக்கும் ... 0
0
Reply
SULLAN - chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 15:15 Report Abuse
ஆனாலும் எலி அம்மணமாக ஓடுவதற்கு உதாரணமாக சொல்வது நல்லதுக்கில்லை. 0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 15:13 Report Abuse
பதவியும், அதிகாரமும் இல்லாமல் இல்லாமல் இவர்களால் இனி சொத்துக்கள் குவிக்க முடியாது என்பதால் திரு.சோ அவர்கள் சொன்னமாதிரி, இவர்கள் அலகு குத்திக்கொண்டு, காவடி கூட தூக்க தயாராகிவிட்டார்கள் போல இருக்கிறது.. 0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 14:48 Report Abuse
ஹிந்துக்களே.. கிருஸ்த்துவர்களும், இஸ்லாமியர்களும் வாக்கு வங்கிகளாக இருப்பதன் பவர் இப்பொழுதே நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.. ஹிந்துக்களை இளிச்சவாயர்களாக்கி அரசியல் வியாதிகள் லாபம் அடைகின்றனர்.. ஹிந்துக்களே மிகவும் எச்சரிக்கையாக கட்டுக்கோப்பாக இருந்து நீங்களும் ஒரு வாக்கு வங்கியாக மாறுங்கள்... இனிவரும் காலங்களில் நீங்கள் எடுக்கப்போகும் முடிவுதான் ஹிந்துக்களை காப்பாற்றும்.. சந்ததியினரின் எதிர்காலம் நன்றாக இருக்க தேச நலனுக்கு ஒரு நல்ல முடிவை எடுங்கள்.. செத்த பாம்புகள் , குற்றுயிராக இருக்கும் நச்சுப்பாம்புகள் இவைகளுக்கு மீண்டும் உயிர் குடுத்து விடாதீர்கள்.. எச்ச்சரிக்கை.. இரண்டு திராவிஷங்களுக்கும் அழிந்து அண்ணாமலை இயக்கம் போன்ற ஒரு நல்ல மாற்று அரசியல் உருவாவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.. 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 14:40 Report Abuse
எலி ஏன் அம்மணமாய் ஓடுகிறது. 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 14:39 Report Abuse
அப்படியென்றால் உதயநிதி நீதி மன்றத்தில் சனாதானத்தைப் பற்றி
அதாவது ஹிந்து மதத்தைப் பற்றி இவைகளை அழிக்க வேண்டும் , இவை கொடூர வியாதிகள் என்று பேசியதற்கு
மன்னிப்பு கேட்பாரா ? ஸ்டாலின்
வீரமணி, ஆபாச ராசா ஆகியோரையும்
பொதுவெளியில் மன்னிப்பு கேட்கச் சொல்வாரா ? 0
0
Reply
S SRINIVASAN - ,
30 ஜூன்,2026 - 14:38 Report Abuse
இந்துக்கள் எதிர்ப்பை கைவிட்டாலும் இந்துக்கள் கைவிடமாட்டார்கள் திராவிட மாடல் எதிர்ப்பினை. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
30 ஜூன்,2026 - 14:35 Report Abuse
சிறுபான்மை வாக்குகள் டிவிகேயிடம் நிரந்தரமாகவே சென்றுவிட்டதாகக் கூற முடியுமா ?? 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 14:34 Report Abuse
அப்போ மகன் நான் கிருத்துவன் இல்லை. அம்மா சொல்படி ஹிந்து.
இந்து பிராமண சாமியார்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெறுவேன். என் மனைவியும் ஹிந்து
ஆக மாறிவிட்டார் என்று அறிக்கை விடுவாரா ? 0
0
Reply
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
30 ஜூன்,2026 - 13:41 Report Abuse
ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா? திமுக தலைமை திடீர் ஆலோசனை - அப்பாடா இனி ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு - தீபாவளி ,கோகுலாஷ்டமி ,சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவார் .ஹிந்து கோவில்கள் செல்லுவார் . ஹிந்துக்களின் வாழ்வில் சந்தோசம் பொங்கோ பொங்கென்று பொங்கும் .ஹிந்து மதம் இனி புனிதம் பெறும் இனி ஸ்டாலினை தொடர்ந்து ஓசி சோறு மணியும் ஹிந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்லுவார் .அப்புறமென்ன ஸ்டாலின் ஹிந்து மத மக்களின் காவலனாக மாறிடுவார் .இப்படியெல்லாம் நடந்தால் ஆச்சரியம் இல்லை . 0
0
Reply
மேலும் 56 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement