அண்ணாமலை பக்கம் பா.ஜ.,வினர் போனது ஏன்? மத்திய அமைச்சர் நிர்மலா விசாரணை
சென்னை: 'அண்ணாமலைக்கு ஆதரவாக, பா.ஜ., நிர்வாகிகள் சென்றது ஏன்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, சட்டசபை தேர்தலுக்கு பின், அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்' என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இதைத் தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், அண்ணாமலையுடன் கைகோர்த்தனர்.
அதிருப்தி
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்தார். அப்போது, தமிழக அரசியல் சூழல் குறித்து, மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்தார்.
அதன்பின், மாநில நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்தார். அப்போது, 'அண்ணாமலை பற்றி நாம் பேச வேண்டாம். ஆனால், அவர் தனி அமைப்பு தொடங்கியதும், பா.ஜ.,வில் பல ஆண்டுகளாக பயணித்த நிர்வாகிகள் சென்றது ஏன்; யார் யார் சென்றனர்' என்ற, விபரங்களை கேட்டுள்ளார்.
அப்போது, மாநில நிர்வாகிகள் பலர், 'அண்ணாமலையின் செயல்பாடுகள் பிடித்ததால், அவர் அமைப்பில் இணைந்துள்ளனர். சிலர், கட்சி தலைமை, மாவட்ட தலைமை மீதான அதிருப்தியால், அவருடன் சென்றுள்ளனர்' என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், மாநில நிர்வாகிகள் பலர், தங்களின் கோரிக்கைகளையும், கட்சியில் தங்களுக்கு நிகழும் இடர்ப்பாடுகள் குறித்தும் அவரிடம் விவரித்து உள்ளனர்.
இந்த விபரங்களை, பா.ஜ., தலைமையிடம் நிர்மலா சீதாராமன் கூறுவார் என்றும், விரைவில், தமிழக பா.ஜ.,வில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
@block_B@
பா.ஜ.,வில் இருந்து விலகி, 'வீ தி லீடர்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலையுடன், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் போனில் பேசி இருக்கிறார். அப்போது, 'உங்கள் வலிமை, தலைமைக்கு நன்றாகவே தெரியும். ஆனால், யார் இல்லையென்றாலும் கட்சி நடக்கும் என்று தலைமை எண்ணுவது இயல்பு. எனவே தான், நீங்கள் வெளியேற நினைத்தபோது, தலைமை தடை போடவில்லை.
நீங்கள் தனியாக செயல்பட்டால் யாருக்குமே சாதகமில்லை. மீண்டும் பா.ஜ.,வுக்கு வந்தால், தலைமையிடம் நானே பேசுகிறேன்' என சமரசம் செய்திருக்கிறார். ஆனால், அண்ணாமலையோ, 'இனி திரும்பி வர முடியாது. நல்லதோ கெட்டதோ, இப்படியே பயணிக்கிறேன்' என மறுப்பு தெரிவித்து விட்டார்.block_B
@block_Y@
அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் செயல்படும் வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவையும், நியூஜெர்சி நகர தமிழ் பேரவையும் இணைந்து, 39வது தமிழ் விழாவை ஜூலையில் ஏற்பாடு செய்துள்ளன. நியூஜெர்சி கன்வென்ஷன் மையத்தில், ஜூலை 2, 3, 4ம் தேதிகளில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதற்காக, அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று வந்த பின், வீ தி லீடர் அமைப்பின் சார்பாக மொபைல் போன் செயலியை வெளியிட உள்ளார்.block_Y
முக்கிய காரணம் தாங்கள் ஆதரவு வானதி போன்ற மக்களுக்கு கொடுத்தது தான்
இத் தளத்தில் வரும் பதிவுகளை பார்த்தாலே தெரியும். இன்றைக்கு தமிழக பா.ஜ.கவை வாரித் தூற்றுபவர்கள், கேலியும், கிண்டலும் செய்பவர்கள், குறிப்பாக தமிழகத்தில் இரண்டு பெண் தலைவர்கள், மத்தியில் ஒரு பெண் தலைவர் இவர்களை குறி வைத்து தாக்குவது தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர்,த.வெ.க ஏன் காங்கிரஸ் கூட இல்லை. பொது வெளியில் இவர்களை அளவு கடந்து விமர்சனம் செய்வது தமிழக பா.ஜ.கவை வளர்க்க வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்து எந்த ஒருவருக்கு சகல அதிகாரங்களையும் அள்ளிக் கொடுத்தீர்களோ அவரது ஆதரவாளர்கள்தான். இதில் வருந்தத்தக்க ஒரு விசயம் நாகரிக அரசியல் நடத்த விரும்புவதாக கூறும் அவர் யாரையும் தரக் குறைவாக பொது வெளியில் விமர்சிக்க வேண்டாம் என ஒரு வார்த்தை கூட இது வரை கூறவில்லை. இதனைக் கண்டிக்க வேண்டாம் குறைந்த பட்சம் அட்வைஸ் கூடவா அவரது ஆதரவாளர்களுக்கு அவரால் செய்ய முடியாது?
தமிழ் மக்களின் தேவைகளை புரிந்து கொள்ளாத எந்த கட்சியும தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது.
CENTRAL BJP is favourites DMK party. So anti DMK people will automatically go to ANNAMALAI.
பல அண்ணாமலையை உருவாகுவதை விட்டுவிட்டு இன்னும் ஒரே ஒரு தமிழிசையை உருவாக்குங்கள். கட்சி செழிப்பாக வளரும் . முருகன் அருள் உங்க பக்கம்தான்.
அண்ணாமலை பாதயாத்திரை நடத்தியபோது அதற்கு நிதியுதவியும் ஊடக உதவியும் அளித்தது பிஜெபி தலைமை. சமீப தேர்தலில் கூட யாருக்குமே அளிக்காத ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்காக செலவு செய்ததும் கட்சித் தலைமைதான். இதற்கெல்லாம் கிடைத்த கைம்மாறு என்ன? வளர்த்துவிட்ட தலைமையையே அமர் பிரசாத்தின் வார் ரூம் கும்பல் மூலம் கிண்டல் செய்து தாக்கப்பட்டதுதான். அமர் போன்ற கைத்தடிகளை விரட்டும்வரை அண்ணா வளர வாய்ப்பில்லை.
அண்ணாமலை வளரவிட்டால் பரவாயில்லை ....ப ஜா க கட்சி எப்படி வளர்க்க வேண்டும் என்பதுதான் அவர்கள் கவலைப்பட வேண்டியது .....காட்பாடியில் பைரா ஹிந்துக்கு பாதிப்பு ....பைரா சமூகத்தினர் வெளியூர் சென்று ஜோதிடம் சாஸ்திரம் பார்ப்பவர்கள் ....மதம் மாற்றிகள் மற்றும் சிறுத்தைகள் கொடுக்கும் தொல்லையால் பைரா ஹிந்துக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ....இதற்கு இங்குள்ள ப ஜா க என்ன செய்தது ??...
காட்பாடியில் பைரா ஹிந்துக்கு பாதிப்பு ....பைரா சமூகத்தினர் வெளியூர் சென்று ஜோதிடம் சாஸ்திரம் பார்ப்பவர்கள் ....மதம் மாற்றிகள் மற்றும் சிறுத்தைகள் கொடுக்கும் தொல்லையால் பைரா ஹிந்துக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ....இதற்கு இங்குள்ள ப ஜா க என்ன செய்தது ...
அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களையும் இந்தியர்களையும் திரட்டி அண்ணாமலே தமிழக ஆச்சியை பிடிக்கபோகிறார்.
நீங்க தான் 10 அண்ணாமலையை உருவாஇக்குவீர்களே. 1 அண்ணாமலை சென்றால் என்ன நஷ்டம்?
போனவர்களை விடுங்கள். புதியதாக ஏன் கட்சியில் யாரும் சேர முன்வருவதில்லை என நிர்வாகிகளிடம் கேளுங்கள். யாரையும் பேச விடமாட்டார்கள். இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸும் பாஜகவும் ஒன்றுதான். தொடர்களைவிட தலைவர்கள் அதிகம். காங்கிரயசில் 10 என்றால் இங்கு 15 கோஷ்டிகள். ஓட்டு சதவிகித்தைவிட 3 மடங்கு அதிகம்.