தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா பிரபுக்கு பொறுப்பு

பெங்களூரு: தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா பிரபுக்கு புதிய பொறுப்பு வழங்கி, கர்நாடகா அரசு உத்தர விட்டுள்ளது.

இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

காத்திருப்போர் பட்டியலில் இருந்த திவ்யா பிரபு கிராம வளர்ச்சி துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அபிராம் ஜி சங்கர், கர்நாடக சுரங்க சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவினாஷ் மேனன் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கியோனிக்ஸ் நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த யோகிஷ், வேளாண் சந்தைப்படுத்துதல் துறை இயக்குனராக நியமன மிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

Advertisement