பலசரக்கு கடையில் திருடிய 3 பேர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பலசரக்கு கடை பூட்டை உடைத்து திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் பாண்டிக்கண்மாய் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 71. பலசரக்கு கடை அமைத்து வியாபாரம் செய்கிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு அலைபேசி திருடு போனது தெரிய வந்தது. ராமநாதபுரம் பஜார் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்த போது 3 வாலிபர்கள் கடையை உடைத்து திருடியது தெரிந்தது. திருட்டில் ஈடுபட்டது கே.கே.நகர் சித்திரவேல் மகன் சுரேஷ் 31, கதிரேசன் மகன் சாத்தையா 37, மீனாட்சிபுரம் மதி மகன் வினோத் 29, எனத் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து பணம், அலைபேசியை கைப்பற்றினர். –––
மேலும்
-
இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்
-
சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
-
அன்னாபிஷேகம்
-
உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்