தம்பியை தாக்கிய அண்ணன் கைது

கிள்ளை: சொத்து பிரச்னை காரணமாக தம்பியை தாக்கிய, அண்ணணை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அடுத்த நற்கரவந்தன்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன்,33; இவரது, சகோதரர் வினோத், 36; இருவருக்கும் சொத்து  பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம்,15 ம் தேதி அருள்செல்வன் வீட்டில் இருந்த மின் மோட்டாரை, வினோத் கழற்றி எடுத்து சென்றதால், மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அப்போது, வினோத், அருள்செல்வத்தை தாக்கி, மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, அருள்செல்வன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, வினோத்தை, 36; கைது செய்தனர்.

Advertisement