தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
சென்னை: அனைத்து தவெக எம்எல்ஏக்களிடமும் கடந்த 40 நாட்களாக பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் நிர்மல்குமார் கூறியதாவது: அனைத்து தவெக எம்எல்ஏக்களிடமும் கடந்த 40 நாட்களாக ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். ஒரு சில எம்எல்ஏக்களை மிரட்டியுள்ளனர். தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி நடைபெற்றுள்ளது. ஸ்டாலின், உதயநிதி உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி போன்ற ஆட்கள் எங்களது பல எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேரம் பேசி இருக்கின்றனர்.
திமுக தரப்பில் இருந்து பேரம் பேசப்படாத தவெக எம்எல்ஏக்களே இல்லை.திமுகவுடன் இபிஎஸ்யும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றனர். ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் மிரட்டப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒரு எம்.எல்.ஏ. புகாரளித்துள்ளார். தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் தொடர்ந்து பேசுவதன் பின்னணி பேரம் தான். ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் ரூ.40 கோடி, ரூ.50 கோடி கொடுத்து பர்சேஸ் செய்யும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறார்.
ரூ.50 கோடி கொடுத்து எம்எல்ஏக்களை வாங்க ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? மக்களுக்கு செய்த கெடுதல்களுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு, தயவு செய்து ஸ்டாலின் இதற்கு மேல் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள். தவெக எம்எல்ஏக்கள் வெறும் ரூ.2 லட்சம் செலவு செய்து வென்றவர்கள். ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்து தவெக எம்எல்ஏக்கள் வெல்லவில்லை. தவெக எம்எல்ஏக்கள் தொகுதிக்கு ரூ.70 கோடி செலவழித்து வெல்லவில்லை. தவெக எம்எல்ஏக்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. எப்போது தேர்தல் வந்தாலும் தவெக சந்திக்க தயாராக உள்ளது.
எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியவர்களிடம் கரூர் கம்பெனிக்கு நேரடி தொடர்பு உள்ளது. கீழ்த்தரமான கேவலமான வேலை செய்வோர் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவெக யாரிடமும் பேரம் பேசவில்லை. பேரம் பேசியவர்கள் கைது செய்யப்பட்டதை மறைப்பதற்கு திமுக கவர்னர் இடம் புகார் அளித்துள்ளது. பேரம் பேசியதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடலாமே. தவெகவில் சேருபவர்கள் மீதான வழக்கில் எந்த சமரசமும் கிடையாது. இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மைனாரிட்டி அரசை கவிழ்க்க யாராவது பணம் கொடுப்பார்களா ஓவர் ரீல்ஸ் கட்சிக்கு ஆகாது
நீங்கள் துணிவுடன் (அப்டின்னுஒண்ணுஇருந்தால்) இந்த பேரத்திற்காக கைது செயுங்கள் பார்க்கலாம்...அதான் ஆட்சி அதிகாரம் உங்கள் கிட்ட இருக்கே. பின் ஏன் தாமதம்?
கெடுவான் கேடு நினைப்பான், இது தீயசக்தி, துஷ்ட சக்தி இரண்டுக்கும் மிகச்சரியாக பொருந்தும்.
The present government should work to recover billions, syphoned off by all previous governments, before wasting time on inter party politics. Secondly, the present government should be allowed to complete the term of FIVE YEARS. Above all, voters should be cautious and and not to sell their votes again.
ஆடு புலி ஆட்டம் இப்போது சுவாரஸ்யமாக சூடு பிடித்திருக்கு, வாழ்வா சாவா என தீயசக்தியும் துஷ்டசக்தியும் களத்தில் எதிரெதிரே இறங்கியுள்ளது, ஆனால் ஒன்று நீர் செய்தால் அது புனிதம், அடுத்தவர் செய்தால் குற்றம் என இப்போது கூப்பாடு போட்டு என்ன பயன்? அடுத்தவர்களை காலைவாரி சந்தோஷப்பட்ட நீங்கள், உங்களின் விரலை கொண்டே உங்கள் கண்களை குத்தவைத்ததை கவனிக்க தவறிவிட்டீர்கள், ஆண்டவன் கொடுத்த பரிசை தவறான முறையில் கையாண்டதன் விளைவு...... கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்கிற பழமொழி சரியாதான் வேலை செய்கிறது.
செந்தில்பாலாஜி அன்கோ எதைவேண்டுமானாலும் செய்வார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்த விவகாரத்தில் நம்ப முடியவில்லை. அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்களை குதிரைப்பேரம் நடத்தி தவெக விலைக்கு வாங்குகிறது என்ற குற்றச்சாட்டிலிருந்து திசைத்திருப்பவே நடத்தப்படும் நாடகம் போல தெரிகிறது. எதுவாக இருந்தாலும் ஊழல்வாதிகள் சிறை சென்றால் சரி தான்.
ஒன்றை மறைக்க இன்னொரு நாடகம், இந்த நாடகமெல்லாம் பழைய டெக்னிக், தீயசக்தி பல தசாப்தங்களாக செய்யும் உருட்டல் அதை அப்படியே ஸ்டிக்கர் ஒட்டி லாட்டரியும் உருட்டுகிறது. அன்று மானங்கெட்ட பொய்கோவை இப்படித்தான் கட்சியில் இருந்து தீயசக்தி வெளியேற்றியது. வேண்டுமானால் அவனிடமே கேட்டுப்பாரும்.
கேவலத்தின் கேவலம் தூயசக்தி கூத்தாடி திராவிட அயோக்கியர்களை விட படு அயோக்கியனானக்கு ஓட்டு போட்டவர்கள்
பர்சேஸ் செய்ய முயற்சிக்கே கதறுகிறீர்கள்? இதை நீங்கள் பண்ணும் போது அப்படித்தானே இருக்கும் அடுத்தவர்களுக்கு?
அப்போ அதிமுக எம் எல் எ வை நீங்க விலைக்கு வாங்குறீங்கள்ளே , அந்த கேஸ் என்ன பண்ண போறீங்க ? யாரை அர்ரெஸ்ட் பண்ணுவீங்க