சாய்பாபா காலனி மேம்பாலத்தில் பா.ஜ.தேசிய செயலாளர் ஆய்வு

கோவை: மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் எதிரில் நடந்து வரும் மேம்பால கட்டுமானப்பணிகளை, பா.ஜ.,தேசிய செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் பார்வையிட்டார்.

‘‘12 ஆண்டுகள் பிரதமர் மோடி அரசின் சாதனை பட்டியலில் இந்த பாலமும் இடம் பெறுகிறது. ரூ.72 கோடி செலவில் ஒரு கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த பாலம் கட்டப்படுகிறது. வரும் ஆக.,ல் திறக்கப்பட உள்ளது,’’ என அவர் தெரிவித்தார்.  

மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட மையக்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பிரீத்தாலட்சுமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Advertisement