ஜி.எஸ்.டி., தின கருத்தரங்கு

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் துறை முதுகலை உயராய்வு மையம் சார்பில் ஜி.எஸ்.டி. தினத்தை முன்னிட்டு வருங்கால வர்த்தக வல்லுநர்களுக்கான ஒரு நடைமுறை அணுகுமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். துறைத்தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாணவி ராஜேஸ்வரி வரவேற்றார். மாணவி காளீஸ்வரி அறிமுக உரையாற்றினார். வருமான வரி நிபுணர்கள் சுல்தான் அலாவுதீன், தாஜுல் மிலாத், பயாஸ் அஹமது பேசினர். மாணவி சங்கீதா நன்றி கூறினார். பேராசிரியர்கள் பாலசத்யா, சாய் மோகனா ஒருங்கிணைத்தனர்.

Advertisement