போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு

சோழவந்தான்: சோழவந்தானில் திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி சார்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடந்தது. முதல்வர் ஜெயசங்கர் துவக்கி வைத்தார். ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். போலீஸ் எஸ்.ஐ., சண்முகவேலு போதை ஒழிப்பின் அவசியம், இளைஞர்களின் பங்கு குறித்து பேசினார். துணை முதல்வர் சந்திரசேகரன் நன்றி கூறினார். போதை ஒழிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன், என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் வடிவேல்ராஜா, அருள்மாறன், ரமேஷ்,கண்ணன், வடிவேல், என்.சி.சி., அலுவலர் ராஜேந்திரன், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ்பாபு, முருகன், ரெட் ரிப்பன்கிளப் ஒருங்கிணைப்பாளர் கணபதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement