காட்டெருமை தாக்கி கூலி தொழிலாளி காயம்

கோத்தகிரி: கோத்தகிரியில் காட்டெருமை தாக்கியதில் கூலி தொழிலாளி காயமடைந்தார்.

கோத்தகிரி கிளப் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 54. இவர், தனியார் விடுதியில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றபோது, புதர் மறைவில் இருந்த காட்டெருமை, திடீரென தாக்கியதில், துாக்கி வீசப்பட்டு, விலா எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார்.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement