நாய் குரைத்ததால் கத்தியால் குத்தி கொடூரம்; போலீஸ் வழக்கு

2

கோவை: தன்னைப் பார்த்து குரைத்த நாயை கத்தியால் குத்தி கொன்றவர் மீது கோவை மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை பாலத்துறை முருகன் கோவில் வீதியில் ரஞ்ஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 வயதான பொமரேனியன் ரக நாய் வளர்த்து வந்தார். இவரது நாய் குரைத்துக் கொண்டு இருந்ததற்கு பக்கத்து வீட்டுக்காரர் விமல் சண்டை போட்டு இருக்கிறார்.

ஆத்திரம் அடைந்த விமல் கத்தியால் ரஞ்ஜித்தின் வளர்ப்பு நாயை சரமாரியாக குத்தி விட்டார். இதில் அந்த நாய் உயிரிழந்தது. மிருக வதை தடுப்பு சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் அளித்த புகார் படி கோவை மதுக்கரை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement