முதல்வருக்கு எதிராக அவதுாறு; மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
சென்னை: முதல்வருக்கு எதிராக அவதுாறு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரது முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சில வாரங்களுக்கு முன் திருச்செந்துாரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் விஜய்யை ஒருமையில் விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, தவெக நகரச் செயலாளர் செல்வம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அவர் மனுவில், ''ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற முறையில் பேசினேன். அரசியல் உள் நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், ''எனது பேச்சுக்கு அவதூறு வழக்கு தான் தாக்கல் செய்திருக்க வேண்டும், போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாது'' என வாதிட்டார். பிறகு,''7 முறை எம்எல்ஏவாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும்'' என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிறகு ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கூறுகையில், ''1967ம் ஆண்டுக்கு பின் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். எம்எல்ஏவாக இருப்பவர் ஏன் இதுபோல பேச வேண்டும்,'' என்று கேள்வி எழுப்பி, முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
கைது
இதையடுத்து துாத்துக்குடி மாவட்டம் ஆத்துார் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்தார் என்றும், முதல்வர் விஜய்யை, ஒருமையில் அவதுாறாக பேசியதாகவும், அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது கைது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, கைது செய்யப்பட்ட முதல் மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் கண்டனம்
திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை; முதல்வரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது 'Take Diversion' அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்!. கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் தவெக எம்எல்ஏ மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தூயசக்தி ஆட்சி, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழகம் முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி எம்எல்ஏக்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா? அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து, விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதல்வர். ஆணவம் அழிவிற்கு வழி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
DMK TVK, ஆட்சியிலிருந்து ஊழல் வரை 100% ஒரே மாதிரி செயல்படுகின்றது
Anita Radhakrishnan spoke Ill of Vijay on personal matters and Stalin tries to justify it, forgetting so many skeletons are in DMK side too.
More Former Ministers are going to be arrested on corruption ges. Finally, top DMK leaders too will follow based on confession by the arrested Former Ministers.
அடுத்த இலக்கு செந்தில் பாலாஜியும் அவருடைய தம்பியும். தலைமறைவாக பதுங்கியிருக்கும் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
அவர் மாஜி மந்திரி இல்லை...
கெரகத்த! என்ன இப்படி பேயாட்டம் ஆடுராங்க?நன்ரி கெட்ட சென்மங்கள்.எங்க தங்கா தள்ளபதி மட்டும் தோக்குலேன்னா இவுனுக எல்லாம் ஆச்சிக்கி வந்துருக்க முடியுமா?.ஏதோ போனாப் போகுதுன்னு இந்த தடவ தோத்து போயி விட்டுக் குடுத்துருக்காறு.எங்க தள்ளபதி கயில தா நூலு இருக்குது.இப்போதுக்கி ஆடுரா ராமா ஆடுன்னு ஆட விட்டு வேடிக்கி பாக்குராறு.நூலை இழுத்திருன்னா அவ்ளோதா சோலி முடீஞ்ச்சீ.கெரகத்த!
திருட்டு திமுகவை விட சளைத்தது அல்ல TVK இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்
அய்யா... அங்குசாமி...? தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆதவ் “Fool முதலமைச்சர்”னு சொன்னாரே... அது வாழ்த்துவதா சார்...? “பேய் அரசாண்டால் பிணம் தின்னம் சாத்திரங்கள்” அப்படீன்னு கவிஞன் பாடியது சரிதானோ...?
கானோஜ், உண்மைய சொன்னா தப்பு இல்லையே
அரெஸ்ட் தானே பண்ணியிருக்காங்கே. அதுக்கு ஏன் இவ்வளவு குதியாட்டம்.. தெகிரியம் இருந்தா அண்ணன் மேல கைவைக்கமுடியுமா? அவரை அடிக்கமுடியுமா அல்லது உதைக்கத்தான் முடியுமா.. அடிச்சிப்பாருங்க தமிழ்நாடே கொந்தளிக்கும்.. ஒரு பய ஊருக்குள்ள நடமாடமுடியாது.. யாருன்னு நெனைச்சீங்க..
தமிழக மக்களின் காவல் தெய்வங்களே, உங்களை சட்டப்படி பணி செய்ய விடாமல் ஏவல் ஆட்களாக மாற்றி அவமானப்படுத்திய திமுகவின் மாஜி மந்திரிகள், எம்எல்ஏக்கள் முதல் அனைத்து மட்ட ஆட்களையும் லாடம் கட்டுங்கள். மாண்பு மிகு முதல்வர் அவர்களால் உங்களுக்கு சட்டபடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடைத்து விட்டது. ஐந்து வருடங்கள் உங்கள் தன்மானங்களை மதிக்காத அனைவரையும் வெளுத்து விடுங்கள். உங்களுக்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு இது.
பாராட்டப்படவேண்டிய செயல். இருப்பினும், முதல்வருக்கு எதிராக அவதூறு பேசியதற்காக மட்டும் எடுத்த இப்படிப்பட்ட நடவடிக்கை பொது மக்கள், சமூகம், எதுவாயினும் எவராயினும் அவர்கள் மீது அவதூறு நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமுமாக அவதூறு பேசிக்கொண்டிருப்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குறிப்பாக பிராமண சமூகத்தினர் எதிராக சகட்டுமேனிக்கு அவதூறு பேசுபவர்களை ஏன் கண்டிக்கவோ நடவடிக்கையோ எடுப்பதோ இல்லை?