லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு வராத திமுக மாஜி எ.வ.வேலு
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, உடல்நிலையை காரணம் காட்டி இன்று(ஜூலை 03) லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கடந்த, தி.மு.க., ஆட்சியில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்தவர் வேலு. தற்போது திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்த போது, கரூரில் சாலையே போடாத சங்கரானந்த் என்ற நிறுவனத்திற்கு, 3.23 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த, 26ம் தேதி, வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உட்பட, 40 இடங்களில் சோதனை நடத்தி, 40 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என வேலுவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. திங்கட்கிழமை அல்லது வேறு ஒரு நாளில் ஆஜராக அவரது வழக்கறிஞர் தரப்பில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
@block_G@
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் 10 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், எ.வ.வேலு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.block_G
விசாரணைக்கு வரணுமன்னா , உடனே ஆஸ்பத்திற்கு ஓடுவார்கள் திராவிட பெருச்சாளிகள்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் வேறு எப்படி இருக்கமுடியும். விசாரணைக்கு வராதவர்களை குண்டுக் கட்டாக தூக்கி உள்ளே வைக்க தெரியாதவர்களா காவல் துறை?
திராவிட மாடல் அரசின் முதல்வர் லண்டனுக்கு ஓடிவிட்டார் மாஜி அமைச்சர் வேலு சிங்கப்பூறில் மாயாமாகிவிட்டர் இப்படியே ஒவ்வொரு பழைய அமைச்சர்ககளும் இனி நாடுவிட்டே அயல்நாட்டிற்கு ஊழல்கள் விசாரணைக்கு அஞ்சி ஓடி விடுவார்கள் அல்லது அங்கேயே மாயமாகி விடுவார்கள் அதற்குள்ளாக லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தால்தான் மக்களிடம் சுரண்டப்பட்ட பணம் பொருள் கொஞ்சமாவது திரும்ப வரும் இல்லையேல் எல்லாமே சுவாஹாதான்
இரண்டு நாளைக்கு பேப்பரில் பரபரப்பு நியூஸ் வரும்! அவ்வளவுதான் நடவடிக்கை! அப்புறம் அண்ணன் அவருடைய வேலையை எப்போதும் போல பார்ப்பார்! நாமளும் அடுத்த நியூஸுக்கு கருத்து போடப் போய்விடுவோம்! சூரியன் வழக்கம் போல் கிழக்கில் உதிக்கும்! மேற்கில் மறையும்!
இதுக்கெல்லாம் ஜெ வால் மட்டும் தான் முடியும்... கருணாநிதியை தூக்கிட்டு போய் வச்சாங்களே ... அட அட... அந்த சம்பவத்தை விஜய் செய்யணும் ...
பாலாஜியும் ஓடிப்போச்சு ... வேலு ஆஸ்பத்திற்கு போய்டுச்சு... பாலாஜி தம்பி அசோக் முன் ஜாமீன் கேட்டு சுத்திட்டு இருக்கு... அனிதா மட்டும் மாட்டிருச்சு பாவம்..
ஏனப்பா இந்தியாவுல ஆசுபத்திரியே இல்லையா உன் உடம்புக்கு சிகிச்சை அளிக்க.. சிங்கப்பூருக்குத்தான் போகணுமா.. யாரு ஊட்டுப்பணம்.
முதலில் துபாய், இரண்டாவது லண்டன் மூன்றாவது சிங்கப்பூர் , அடுத்தது னெரிக்காவா. எங்கேயோ இடிக்குதே .
சிங்கப்பூரு ஆசுபத்திரியில அட்மிட்டு ஆயிட்டே போலிருக்கே ?? நீயே இப்படின்னா உன் கோக்குமாக்கு தலைவன் எங்கே அட்மிட்டு ஆவான் ??
லண்டன் ஆஸ்பத்திரி.
அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கே
சிபி ஐ விசாரணைக்கு சம்மன் அனுப்பியபோது உடம்பு சரியில்லாமல் படுத்தவங்கதான் தயாளு அம்மாள். இதுவரை சீக்காளியாவே இருக்காங்க. வேலு ஐயா பயப்படாம போங்க. காவேரி ஹாஸ்பிடல் பக்கத்துலதான் இருக்கு.மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா