கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா
திருக்கோவிலுார்: கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு வார விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு மண்டல இணை பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் சரக துணை பதிவாளர் சாந்தி, ஒன்றிய பொது விநியோக திட்ட கூட்டுறவு சார் பதிவாளர் அனுஷா முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார்.
நானோ யூரியாவின் பயன்கள் குறித்து கள அலுவலர் ஹரிஷ்கவுதம் மகளிர் குழு மற்றும் விவசாயிகள், பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். 5 குழுக்களுக்கு ரூ. 73.52 லட்சத்திற்கான தாட்கோ மற்றும் தனிநபர் கடனுக்கான காசோலையை மண்டல இணைப்பதிவாளர் பயனாளிகளுக்கு வழங்கினார். திருக்கோவிலுார் சரக அலுவலக கண்காணிப்பாளர் நிர்மல் நன்றி கூறினார்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது