2026, தமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் : 118க்கு 6 படங்கள் மட்டுமே லாபம்!
2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகப் படங்கள் வெளிவந்தன. தியேட்டர்களில் 279 படங்கள் வெளியாகின. முதல் ஆறு மாதங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை சுமார் 124. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ம் ஆண்டில் சுமார் 118 படங்கள் வெளியாகி உள்ளன. எண்ணிக்கையில் சில படங்கள் மட்டுமே குறைவு.
சூர்யாவுக்கு முதல் 300 கோடி
கடந்து போன ஆறு மாதங்களில் டாப் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆறு மாதங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2', விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' ஆகிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. கமல்ஹாசன், அஜித் ஆகியோர் நடித்து இந்த ஆண்டில் படங்கள் வெளிவர வாய்ப்பில்லை.
மேலே குறிப்பிட்ட டாப் நடிகர்களை அடுத்து, அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகியோரது படங்கள் வெளிவந்தன. இவற்றில் சூர்யா நடித்த 'கருப்பு' படம் மட்டுமே 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. இந்த ஆண்டில் தமிழில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல நடிக்க வந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தனது முதல் 300 கோடி வசூலைப் பதிவு செய்துள்ளார் சூர்யா.
சூர்யா நடித்த 'கருப்பு' படம் தந்த வெற்றி எதிர்பாராத வெற்றி. கடந்த வருடமே வெளியாக வேண்டிய படம் அப்படியே தள்ளிப் போய், தள்ளிப் போய் இந்த வருடத்தில் வெளிவந்தது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 190 கோடி வசூலைக் குவித்தது. தெலுங்கில் டப்பிங் ஆகி அங்கும் லாபத்தைத் தந்தது.
ஏமாற்றமும்... நஷ்டமும்...
தனுஷ் நடித்து வெளிவந்த 'கர', கார்த்தி நடித்து வெளிவந்த 'வா வாத்தியார்' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'பராசக்தி' படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்று சொன்னார்கள். ஆனால், வசூல் ரீதியாக இப்படம் நஷ்டத்தைத்தான் கொடுத்துள்ளது.
சிலிர்க்க வைத்த சின்ன படங்கள்
முன்னணி நடிகராக சூர்யாவின் 'கருப்பு' தந்த மாபெரும் வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், யாருமே எதிர்பார்க்காத சில சிறிய படங்களின் வெற்றியும் இந்த ஆறு மாதங்களில் அதிகம் கவனிக்க வைத்தது.
விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் திட்டமிட்டபடி ஜனவரி 9 வரவில்லை என்றதும் திடீரென பொங்கல் போட்டியில் குதித்தது 'தலைவர் தம்பி தலைமையில்' படம். இரண்டே வீடுகளைச் சுற்றிச் சுற்றி வந்து போன திரைக்கதை, நகைச்சுவையாக இருந்ததால் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஜீவாவுக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையைப் பெற்றுத் தந்துள்ளது.
அதற்கடுத்து பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த 'வித் லவ்' படம் மற்றுமொரு எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. 2025ல் 'டூரிஸ்ட் பேமிலி' படம் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். கடந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று. அவர் கதாநாயகனாக அறிமுகமான படம்தான் 'வித் லவ்'. இளம் ரசிகர்களின் வரவேற்பை இந்தப் படம் பெற்றதால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
கதை தான் ஹீரோ
தமிழ் சினிமாவில் ஒரு சீனியர் நடிகை முதன்மைக் கதாபாத்திரத்தில் அதுவும் 'கிழவி' கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம் இப்படி ஓடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு படமாக ராதிகா சரத்குமார் நடித்த 'தாய் கிழவி' படம் அமைந்தது. சினிமாவில் ஹீரோயிசம் தேவையில்லை, கிளாமர் தேவையில்லை, நல்ல கதை இருந்தால் போதும், எந்த வயது கதாபாத்திரமாக இருந்தாலும் அது ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என்பதை நிரூபித்த ஒரு படம்.
இளம் படைப்பாளிகள் பக்கம் தமிழ் சினிமா திரும்பிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் 'யூத்' படம். கென் கருணாஸ் இயக்குனராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்த படம். படத்தின் தலைப்பைப் போலவே யூத் ரசிகர்களைக் கவர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவில் வந்த புது 'ஜானர்' திரைப்படம் தான் 'பிளாஸ்ட்'. ஒரு குடும்பத்தைச் சுற்றிய ஆக்ஷன் திரைப்படம். அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். அமர்க்களமான திரைக்கதை, அதிரடியான இடைவேளை என இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படமாக அமைந்தது.
விமர்சன ரீதியாக பாராட்டு
வசூல் ரீதியாக வெற்றி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் திரையுலகினராலும், விமர்சகர்களாலும் சில படங்கள் பாராட்டுக்களைப் பெற்றது. “ஹபீபி, நூறு சாமி” உள்ளிட்ட சில படங்கள் பெரிய வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றன.
வசனங்களே இல்லாமல் விஜய் சேதுபதி நடித்த 'காந்தி டாக்ஸ்' படம் வெளியானது. ஆனால், படத்தை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்கத் தவறிவிட்டார்கள்.
ஏமாற்றிய படங்கள்
ஆர்யா நடித்த 'மிஸ்டர் எக்ஸ்', பரத் நடித்த 'காளிதாஸ் 2', பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்த்து ஏமாந்த படங்களாக அமைந்தன.
118ல் 6 மட்டுமே லாபம்
இந்த ஆறு மாதங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களாக 'கருப்பு' படம் 340 கோடிக்கும் மேல், 'தாய் கிழவி' படம் 90 கோடி, 'யூத்' 80 கோடி, 'பிளாஸ்ட்' 75 கோடி, 'தலைவர் தம்பி தலைமையில், வித் லவ்' தலா 40 கோடிக்கும் மேல் என வசூலித்துள்ளன. இந்தப் படங்கள்தான் லாபகரமான படங்களாக அமைந்துள்ளன.
2026ம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் மொத்தமாக சுமார் 118 படங்களின் மூலம் சுமார் 1000 கோடி வசூலாகியுள்ளது. அவற்றிற்கான பட்ஜெட்டும் அதே 1000 கோடி வரை செலவாகி உள்ளது. லாபத்தைத் தந்த படங்கள் என்று சொன்னால் 6 படங்கள் மட்டுமே என்பது மிகமிகக் குறைவான ஒன்று.
1000 கோடி எதிர்பார்ப்பு
அடுத்து வர உள்ள ஆறு மாதங்களில் எப்படியும் 100 படங்களுக்கு மேல் வெளியாகிவிடும். அனைவரது பார்வையும் 'ஜெயிலர் 2, ஜனநாயகன்' ஆகிய படங்களின் மீதுதான் உள்ளது. தமிழ் சினிமா இதுவரையில் 1000 கோடி வசூலைப் பெற்றதில்லை. அதை இந்த இரண்டு படங்கள் பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அவற்றைத் தவிர நம்பிக்கையான சில படங்களும் வர உள்ளன. அதிகப் படங்கள் வருவது பெரிதில்லை, அதிகப் படங்கள் வெற்றி பெறுவதும், வசூலைக் குவிப்பதும்தான் தேவைப்படுகிறது. அது அடுத்த ஆறு மாதங்களில் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமா காத்திருக்கிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ் மக்கள் மிக சிறந்த படங்களை மட்டுமே ஊக்குவிக்கிறார்கள் என தெரிகிறது
நல்ல சந்தோஷமான செய்தி நாடு கெட்டப் போனதில் சினிமாவின், கூத்தாடிகளின் பங்கு அதிகம்
சூப்பர் ஸ்டார் ரசினியின் சம்பளம் 100 கோடின்னு சொல்றாங்க, ஜோசெப் விசய் அண்ணா மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித் அண்ணா மற்றும் ஆண்டவர் கமல் எதை ஆண்டான்னு தெரியல இவர்களின் சம்பளம் 80 கோடின்னு சொல்றாங்க, ஒன்றரை டன் சூர்யா அண்ணாவின் சம்பளம் 60 கோடின்னு சொல்றாங்க, காஃபி வாங்கி குடிக்க சொல்லும் கார்த்தி அண்ணா, அசுரர் தனுஷ் தம்பி இவர்களின் சம்பளம் 40 கோடின்னு சொல்றாங்க, சிரிப்புடன் உதைணாவை சார் என புகழும் சிவகார்த்திகேயன் மற்றும் விரல் வித்தகர் சிம்பு அண்ணாவின் சம்பளம் 20 கோடின்னு சொல்றாங்க, குஷால் அண்ணா சாரி விஷால் அண்ணாவின் சம்பளம் 15 கோடின்னு சொல்றாங்க மற்றும் இதர சில்லறை நடிகர்களின் சம்பளம் குறைந்தது 3 முதல் 5 கோடிகள் என்றும் சொல்றாங்க. இதுதவிர தமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகள் எனது தலைவன் படம் வெளியாகி முதல் மூன்று வாரங்களில் மட்டும் 400 கோடிகள் லாபம், 600 கோடிகள் லாபம் என்றும் கூவுறானுங்க. ஆனா, சமீபத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க பணம் பத்தவில்லை என்றும் வங்கியில் 40 கோடி கடன் வாங்கி கட்டிட பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் சொல்றாங்க. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? ஒவ்வொரு நடிகனும் வெறும் ஒரு கோடி கொடுத்தாலே 40 கோடி வருமே, அதை வைத்து வங்கியில் கடன் வாங்காமலே நடிகர் சங்க கட்டிடம் கட்டலாமே. சிறு நடிகர்கள் கொடுக்க முடியவில்லை என்றாலும் மேலே சொன்ன பெரு நடிகர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கும் அறுபது முதல் நூறு கோடியில் வெறும் ஐந்து கோடிகள் கொடுத்தாலே ஈசியாக 40 கோடிகள் வந்துடுமே. அதுக்கு ஏன் அவர்களுக்கு மனசு வரமாட்டேங்குது? தாங்கள் சார்ந்து இருக்கும் தொழிலில் கஷ்டப்படும் நடிகர்களுக்கு உதவ மனம் இல்லாத, தாங்கள் சார்ந்து இருக்கும் தொழிலுக்கு ஒரு கட்டிடம் கட்ட பணம் கொடுக்க மனம் இல்லாத இந்த நடிகர்கள்தான் அரசியலுக்கு வந்து பொது மக்களுக்கு நன்மை செய்ய போறானுங்களாம். சமூக நீதி கொண்டு வர்ற போறானுங்களாம், ஊழல் லஞ்சத்தை ஒழிக்க போறானுங்களாம். திருந்துங்கடா டுமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகளே. 10 வருடங்களுக்கு முன் சினிமா டிக்கெட் விலை 50 ரூபாய், இப்போது 150 ரூபாய். 10 வருடங்களுக்கு முன் சினிமா கதாநாயகர்கள் சம்பளம் 20 கோடிகள் இப்போது 80 கோடிகள். ஆனால் ஆண்டவர் எதை ஆண்டான்னு தெரியல பகுத்தறிவு பகலவன் ? நம்மவர் ? டுபாக்கூர் டுமல் சாரி கமல், ஜோசெப் விசய் அண்ணா, ஒன்றரை டன் சூர்யா அண்ணா, காஃபி வாங்கி குடிக்க சொல்லும் கார்த்தி அண்ணா, சோதிகா அண்ணி, ஆல் இன் ஆல் அமீர் அண்ணா, கருத்தியல் நிபுணர் கரு பழனியப்பன், பட வாய்ப்புக்காக போலியான செய்திகளை பரப்பி சில்லறையை சிதறவிடும் சித்தார்த் தம்பி, அவ்வப்போது ட்விட்டரில் வந்து மத்திய அரசுக்கு எதிராக மியூசிக் போடும் ரஹ்மான் தம்பி, பிராந்திய மொழிகளிலும் நடித்து காசு பார்க்கும் பிரகாஷ் ராஜ் வில்லன், நாம் டுமிழர் சீமான் அண்ணா, என்ன ஏதுன்னு தெரியாமல் பட வாய்ப்புக்காக டி ஷர்ட் போடும் ஐஸ்வர்யா தங்கச்சி, காசுக்காக கட்டுமர குடும்பத்தை புகழும் பலான புகழ் வைரமுத்து கவிஞர், மகன் சிபியின் பட வாய்ப்புக்கு கோபாலபுர குடும்பத்தை புகழும் அமாவாசை சத்தியராஜ் இவர்களுக்கு 10 வருடங்களுக்கு முன் விற்றது போல இப்போதும் பெட்ரோல் விலை இருக்கவேண்டும். விளங்கிடும். இவர்களை சொல்லி குற்றமில்லை,
தமிழ் சினிமாவே படுத்து போயிடுச்சு இனி முன்பு போல கருத்துக்கள் நிறைந்த படமே கிடையாது
முன்பெல்லாம் எப்போது புது படம் வெளிவரும் என்று மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள் இப்போதெல்லாம் படம் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை சினிமாவிற்கு இருந்த
மக்கள் மோகம் இப்போது பன்மடங்கு குறைந்துவிட்டது எல்லாமே டிவியில் வெளிவரவுவதுதான் காரணம்
தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி எல்லாம் சாத்தியமே இல்லை. அதனால்தான் அமீர் எல்லாம் வேறு வியாபாரத்துக்கு போய் விட்டார்கள்.
சுவாமி .... இப்போ இவர்களுக்கெல்லாம் வருவாய் வாய்ப்புகள் பல உண்டு ..... ஜாபர் சாதிக் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?? அமீர் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?? காசா போரில் இவர்கள் என்ன பேசினார்கள் என்று கவனித்ததுண்டா ??
அப்புறம் என்ன? விட்டுட்டு புளி வியாபாரம் பண்ண போக சொல்லுங்க!ரசம் வைக்கவாவது ஆகுமே?