திமுக ஆட்சியில் 60% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதில் 25% இல்லவே இல்லை; அமைச்சர் கீர்த்தனா
கோவை: கடந்த திமுக ஆட்சியில் நிறுவனங்களுடன் 60% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதில் 25% இல்லவே இல்லை என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
கோவையில் அவரது பேட்டி: சிப்காட்போன்ற தொழிற்சாலைகள் அமையும் இடங்களில் சாலை, மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் லஞ்சம் இல்லாத, வெளிப்படையான அரசாக அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்படும். இப்பொழுது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யும் போது, ஏதோ ஒரு கம்பெனியை அழைத்து வந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது வேலை கிடையாது. ஒவ்வொரு நிறுவனத்தின் பின்னணியையும் ஆராய்ந்து, பயனுள்ள ஒப்பந்தங்களை மேற்கொள்வதே எங்களது ஐடியா.
கோவையில் தொழில்துறையினர் முதலீடு செய்வதற்கு கேட்பது விமான நிலையம் விரிவாக்கம், அதற்கான வேலை தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. கமிட்டி அமைத்து பணி நடக்கிறது, இந்த முறை நடந்துவிடும். சிறு,குறு நிறுவனங்கள் வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். சோலார் திட்டங்களைப் பொறுத்தவரை, கருவேல மரங்கள் நிறைந்த தரிசு நிலங்களில் சோலார் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இது நடைமுறைப்படுத்தினால் மிகுந்த பயன் கிடைக்கும்.
சோலார் பயன்பாட்டிற்கான 1% வரி விதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும். கடந்த ஆட்சி காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 25% இல்லவே இல்லை. திட்டங்கள் களத்தில் இல்லை. இதுபோல் இல்லாமல் தற்போதைய அரசு அறிவிக்கும் அனைத்துத் திட்டங்களும் 100 சதவீதம் செயல்பாட்டு கொண்டு வருவது தான் எங்களது நோக்கம். வெற்று பேப்பரில் கையெழுத்திடுவதை விடுத்து, 100% திட்டங்களைச் செயல்படுத்துவதே இந்த அரசின் இலக்கு.
எந்தவொரு இளைஞரும் வெளியே போய் ஹைதராபாத், பெங்களூருவில் வேலை தேடி இல்லாமல் இங்கேயே சென்னை, கோவை, மதுரையில் வேலைவாய்ப்புகளை கொண்டு வர எல்லா நடவடிக்கைகளும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். கோவையில் அமைய வேண்டிய செமி கண்டக்டர் ஆலை குஜராத்திற்குச் சென்றதை மீண்டும் கொண்டு வர மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செய்து கொண்டு இருக்கிறோம். அது கண்டிப்பாக நடக்கும். இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா கூறினார்.
இது தான் திராவிட மாயை. வெங்காயம். மாநிலம் முன்னேற்ற இண்டக்ஸில் இடம் பிடிக்க பொய்யான ஒப்பந்தகளை கணக்கு காட்டி இருந்தாலும் ஆச்சரியப் பட எதுவும் இல்லை. இல்லாத திராவிடத்தையே உருட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.
இந்த ஆட்சி வந்ததிலிருந்து கடக்கும் ஊழல், கொலை கொள்ளைகள் வன்கொடுமைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகிவிட்டது இவருக்கு மட்டும் தெரியவில்லையா?
இப்படி வாய்சவடால் பேசுவதைவிட இவர்களுக்கு எதுவும் தெரியாது . இப்படி பேசியே ஆட்சிக்கு வந்தார்கள். இப்படி பேசியே அரசியலைவிட்டே போவார்கள்
Within days of forming of the new governments, several ges of alleged corruption, have come out, and still coming out. Why, NO action, on those alleged corrupts?
மாண்புமிகு அமைச்சர் ஏற்கனவே குறிப்பிட்ட படி சவாலான விஷயமே. செய்து காட்டுங்கள். உப்புக்கு சப்பான விமர்சனங்களால் அதைர்யம் அடைய வேண்டாம். வாய்ப்புக்கள் நிறைய வரும். வாழ்த்துக்கள்.
கடந்த ஐந்தாண்டுகளாக இருந்த பொருளாதார வளர்ச்சியை நிதி அயோக் அறிக்கை லாட்டரி அடிக்க விடாமகல் இருந்தீயின்னா போதும்
பொம்மை மந்திரி, பிரோசனமில்லை. Utter waste for TN Government.
60% புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதில் 25% இல்லையாம். படித்தவர்களே, உமக்கு ஏதாவது கணக்கு புரியுதா?
அதுவரைக்கும் அவுத்து விட்ட முடியை வாரி விட்டு முடியமாட்டேன். இது விசை மீது சபதம் அக்காங்.
உனக்கு என்ன பிரச்னை ??
அது பராகத் அலின்னு போலி பேர்ல திரியிற பரக்காவெட்டி என்பதால எல்லாரும் பரக்காவெட்டியா அலையணுமா?
திமுக, கமிஷனை குறிக்கோளாக கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததா அல்லது நாட்டின் நலன் கருதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வி.மேலும்
-
மண்ணின் சுமை தாங்கும் திறன் அறிவதற்கான வழிமுறைகள்!
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?