பக்தர்கள் பால்குடம்

மேலுார்: கீழையூர் சூரகருப்பு கோயில் ஆனித்திருவிழா நேற்று துவங்கியது. சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள சூரகருப்பு கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

Advertisement