கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே கிணற்றில் இறந்து கிடந்த மேஸ்திரி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணாபுரம் அடுத்த மையனுார், காட்டுகொட்டகையைச் சேர்ந்தவர் அந்தோணி மகிமை ராஜ் என்கிற விஷால், 45; மேஸ்திரி. இவருக்கு விக்டோரியாராணி என்ற மனைவியும், ரூபினா, 17; ரீனா, 12; என்ற 2 மகள்கள் உள்ளனர்.
விக்டோரியா தனது மகள்களுடன் சவரியார்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார். கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற விஷால் வீடு திரும்பவில்லை. இவர் வேலைக்கு வெளியூர் சென்றிருப்பதாக நினைத்திருந்தனர்.
இந்நிலையில், சிங்காரதோப்பு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விஷால் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, விஷால் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது