டிராக்டர் நிறுத்திய தகராறு 7 பேர் மீது வழக்குப் பதிவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நிலத்தில் டிராக்டர் நிறுத்திய தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த வெங்கந்துாரைச் சேர்ந்தவர் பற்குணன், 58; விவசாயி. இவர் தனது நிலத்தின் அருகே உள்ள ஏரி புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த சகாதேவன் மகன் காளிதாஸ், 52; அந்த புறம் போக்கு நிலத்தில் அவரது டிராக்டரை நிறுத்தியுள்ளார்.

தனது அனுபவத்திலுள்ள நிலத்தில் டிராக்டரை நிறுத்தாதே என பற்குணன் கூறியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் காளிதாஸ், பற்குணன் உட்பட 7 பேர் மீது கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement