அரசு பள்ளியில் சதுரங்க போட்டி

தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பாண்டிசெல்வி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டி விதிமுறைகளை விளக்கி கூறினர். இப்போட்டியில் வெற்றி பெறும் 4 மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள். 

Advertisement