சென்னை - கோவை உட்பட 6 ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, ஆறு விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஒரு பகுதி ரத்து சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி, சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர். பெங்களூரு லால்பாக் விரைவு ரயில்கள், வரும் 10, 12, 15, 17, 19, 22ம் தேதிகளில் காட்பாடியில் இருந்து இயக்கப்படும்
கோவை - சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில், வரும் 10, 12, 15, 17, 19, 22ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
கர்நாடக மாநிலம் அசோகபுரம் - சென்ட்ரல் விரைவு ரயில், வரும் 10, 12, 15, 17, 19, 22ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில், வரும் 29ம் தேதி வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். நாகர் கோவில் - தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில், வரும் 30ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து, வரும் 9, 16, 23, 30ம் தேதிகளில், இரவு 11:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்
எழும்பூரில் இருந்து, வரும் 10, 17, 24, 31ம் தேதிகளில், மதியம் 1:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதிகாலை 1:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தண்டவாள மேம்பாட்டு பணி காரணமாக, எழும்பூர் - கேரள மாநிலம் குருவாயூர் ரயில், வரும் 3 - 10ம் தேதி வரை 1:20 மணி நேரமும், வரும் 5, 7, 12, 14, ஆக., 4ம் தேதிகளில் 1:50 மணி நேரமும், 17, 19, 21, 24, 26, 28, 31, ஆக., 2ம் தேதிகளில் 2:15 மணி நேரமும் தாமதமாக செல்லும்.
மேலும்
-
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு; விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு
-
மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம்; கவர்னர் அர்லேக்கர் அழைப்பு
-
நீங்கள் வந்து ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலை இல்லை; திமுக மாஜிக்கு செங்கோட்டையன் பதிலடி
-
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கு; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்
-
மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்தது; டில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்
-
லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம்; மனம் இங்கே தான் இருக்கும் என்கிறார் ஸ்டாலின்