முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு; விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க, மத்திய - மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய - மாநில அரசு உயர் அதிகாரிகள் என, மொத்தம் 26 பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கில் தொடர்புடையவர்கள் தன்னை விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வழக்கை பட்டியலிடப் போவது தெரிந்து தான் அத்தனை அவசரம். இந்த அசிங்க அரசியல் சூழலில் எல்லா இடங்களிலும் ஊழல் மண்டிக் கிடக்கிறது என்று ஜட்ஜ் கூறினார். இது என்ன மாதிரியான காமெடி சம்பவம்.?
பத்துவருடமாக நீதித்துறை என்ன கிழித்தார்கள். இந்தியாவில் நட்க்கின்ற அனைத்து மொள்ளமாறி அயோக்கியத்தனங்களும் கொலை கொள்ளைகளும் ஊழல்களுக்கு முக்கிய காரணம் கேவலமான நீதித்துறை காவல்துறை மற்றும் அரசு துறைகள் தான் .தர்மம் நீதி நேர்மை அறவே இல்லாத துறைகள் தான்
முந்தைய அரசு அ தி மு க அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேசிய பேச்சுக்கள் என்ன? நடந்தது என்ன?
இத்தனை பழைய அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் இடம் மாறி த.வெ.கவிற்கு போனாலும் அவர்கள் எல்லோரையும் ஏன்? த.வெ.கவில் ஏற்கெனவே உள்ள உண்மையான விஜய் நற்பணி மன்ற அமைச்சர்கள் மற்றும் செங்கோட்டையன் போன்றவர்களையே சிவாஜியையே மிஞ்சும் தனது ஓவர் நடிப்பினால் எல்லோரையும் ஓரம் கட்டி விடுவார் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஒருவர். இரண்டாம் தேதி இணைப்பு விழாவிலேயே அவரது மித மிஞ்சிய நடிப்பு எல்லோருக்குமே நன்கு தெரிந்திருக்கும். இதில் அதிகம் உஷாராக இருக்க வேண்டியது கோட்டை மாவட்ட இளைஞரான அந்தப் புதிய அமைச்சர்தான்.
அதிமுகவில் இருந்து நடிகர் விஜய்யின் கட்சிக்கு இந்த விஜயபாஸ்கரை போன்றவர்கள் சேர்ந்த பின்பு முதலாவதாக அக்கட்சியில் ஏதாவது நல்ல பதவியை அதாவது மாவட்ட செயலாளர் போன்ற பதவிகளை கேட்பார்கள். அடுத்த கட்டமாக இடைத்தேர்தலில் நிற்க சீட் கேட்பார்கள். இப்படி கேட்பவர்கள் அனைவருக்கும் பதவியையும், சீட்டையும் கொடுத்துவிட முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களின் ஆசைக்கு கடிவாளம் போட முதல்வர் விஜய்க்கு நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது. அது என்னவென்றால் இப்போது உயர்நீதிமன்றம் இந்த சி.விஜயபாஸ்கருக்கு வழக்கை முடிக்க உத்தரவிட்டதை காரணம் காட்டி மேலும் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் மேல் ஊழல் வழக்கோ வேறு எந்த வழக்காக இருந்தாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வழக்கில் இருந்து (Acquittal) விடுபட்டு வருபவர்களுக்கு பதவி தரப்படும் என்று கூறி விஜய் இப்போதைக்கு தப்பித்துக் கொள்ளலாம். இவர்களை ஒடுக்க இதுதான் இப்போது நடிகர் விஜய்க்கு இருக்கும் ஒரேவழி...
அமைச்சரும் ஒரு சாதாரண மனிதன்தான். அமைச்சர் இல்லாத ஒரு மனிதன் தவறு செய்தால் நாளிதழ்களில் பெருதுப்படுத்துவதில்லை. ஏன் இந்த வேறுபாடு? நாளிதழ்களில் நியாயம் ஏன் இல்லை?
அவ்வளவுதானே இதோ அடுத்த வாரமே முடிச்சுவெச்சிடறோம் . அப்பம்புட்டு பேரும் பிறழ்சாட்சிகளாக மாறினால் நாங்க என்னசெய்யமுடியும். கட்சி கொறடா உத்தரவை மீறி ஒட்டு போட்டதுமில்லாமல் தலைமை செயலகத்திலேயே தவெ க உறுப்பினர் அட்டை வாங்கிய அந்த 4 முன்னாள் அதிமுக எம்எல் ஏ களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் இன்னும் இராப்பகலாக ஆலோசனையில் யிருக்கிறார். அதுக்குள்ள நீங்க.. இன்னும் எவ்வளவு சட்ட சிக்கல்களை ஆராயவேண்டியதிருக்கிறது. இப்படி உத்தரவிட்ட நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய மாணிக்கம் தாகூர் , குருமா போன்றோர் வரும் தொடரில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து கூட்டணி தருமத்தை நிலைநிறுத்தவேண்டும் .
அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு உடனுக்குடன் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். காலம் கடந்து தீர்ப்பு வழங்குவதால், அரசியல்வாதிகள் காந்தியாகவும், புத்தர் ஆகவும் நாட்டில் அவதாரம் எடுத்து விடுவது கொடுமை