தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கு; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்

12


சென்னை: தவெக ஆட்சியை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கில், விசாரணைக்கு ஜூலை 6ம் தேதி ஆஜராக கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 45. இவர், ஐ.பி.டி.எஸ்., என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும், திருச்சியைச் சேர்ந்த நரேஷ், 45, சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், 40 ஆகியோரும், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜா அளித்த புகாரின்படி, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

தொடர் விசாரணையில், த.வெ.க., ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில், கோவை தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, 180 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்ட தகவல், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வரும் ஜூலை 6ம் தேதி விசாரணைக்கு திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக கோரி சம்மன் கொடுத்தனர். இந்த சம்மனை இன்று செந்தில் பாலாஜி வீட்டில் அவரது தந்தை வேலுச்சாமி இன்று வழங்கி இருக்கின்றனர்


@block_P@

லுக் அவுட் நோட்டீஸ்

தவெக எம்எல்ஏக்களை பேரம் பேசி விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் தேடப்படும் நபர், சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பித்து செல்வதை தடுத்து நிறுத்த வழங்குவது தான் லுக் அவுட் நோட்டீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. block_P


சிறப்பு வீடியோ!

ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில்பாலாஜிக்கு சிக்கல்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement