சொத்து பிரச்னை; விவசாயி கொலை

மதுரை: மதுரை மேலூரில் சுண்ணாம்பூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பொன்னம்பலம்,60. அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் ரமேஷ், 40, என்பவருடன் சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதனால் இருவருக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

நேற்று இரவு ரமேஷ் கட்டையால் தாக்கியதில் பொன்னம்பலம் இறந்தார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement