தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது; அமெரிக்காவில் பெட்னா தமிழ் விழாவில் அண்ணாமலை பேச்சு
நமது நிருபர்
"தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது. தமிழர் என்ற வட்டம் பெரியதாக இருக்க வேண்டும்" என அமெரிக்காவில் நடந்த பெட்னா தமிழ் விழாவில் அண்ணாமலை பேசுகையில் தெரிவித்தார்.
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (பெட்னா) சார்பில் நியூ ஜெர்சியில் நடந்த தமிழ் விழாவில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: மலேசியாவாக இருக்கட்டும், சிங்கப்பூராக இருக்கட்டும்.
சாதாரணமாக தெருவில் இருக்கும் வியாபார நண்பர்கள் முதல் ஜனாதிபதி வரை தமிழர்கள் இருப்பதை பார்க்கிறோம். நாம் தயவு செய்து தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்க கூடாது. ஹிந்து என்கிற வட்டத்துக்குள் அடைக்க கூடாது. இஸ்லாமியர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது.
அற்புதமான நூல்
கிறிஸ்துவர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது, எல்லாத்தையும் தாண்டி தமிழர் என்கிற வட்டம் பெரிய வட்டமாக இருக்க வேண்டும், அதில் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.
இதனை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கு காரணம், நம்முடைய தமிழ் மொழியில் புறநானூறு 2 ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிற்கக்கூடிய அற்புதமான நூல். அதில் 182ம் பாடலை படிக்க வாய்ப்பு இருந்தால் உங்கள் குழந்தைகளை படிக்க சொல்லுங்கள். உண்டாலம்ம, இவ்வுலகம் என்ற பாடலாகும்.
அஞ்சாமல் உழைத்து...
ஒரு தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்றால் அமிர்தமே கிடைத்தாலும் அதனை பகிர்ந்து உண்ண வேண்டும். சினம் கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். தூங்காமல், அஞ்சாமல் உழைத்து, புகழுக்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
உலகையே கூலியாக கொடுத்தாலும் சான்றோர் பழிச்சொல் கிடைக்க பெறாத தமிழ் இனமாக இருக்க வேண்டும். தன் முயற்சியை பிறர் நலனுக்காக ஆக்குபவர்களாக இருக்க வேண்டும். கல்விக்கான முக்கியத்துவத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறோம். சமுதாயம் வேண்டும் என்றால் ஒருவன் மேலே, ஒருவன் கீழே என்று சொல்லலாம்.
குரல் கொடுங்க
சமுதாயம் வேண்டுமென்றால் ஒருவனை மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று சொல்லலாம். அறிவு, கண்ணியம், ஒழுக்கம் இருக்க கூடிய மனிதனை மன்னனே என்னோடு படைக்கு வாங்க என்று சொல்ல கூடிய தகுதி கல்விக்கு மட்டும் தான் இருக்கிறது. ஒரு மனித குலம் அறத்துடன் எப்படி வாழ வேண்டும் என்று சொன்ன அற்புதமான நிலத்தில் இருந்து வந்து இருக்கிறோம்.
பெட்னா அமைப்பு வரும் காலத்தில் இன்னும் சிறப்போடு எல்லோரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் குரல் கொடுக்கும் அமைப்பாக பெட்னா இருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
முதல் மந்திரி ஆகனும்
அருமையான பேச்சு. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் எப்படி பேசவேண்டும் நடத்தையில் நாணயம் என்பதற்கு திரு அண்ணாமலை அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு
பலமுறை வெளிநாடு சென்ற கடந்தகால திராவிட மாடல் முதல்வர் தமிழ்மொழியைப்பற்றி ஏதாவது மேடையில் பேசியிருக்கிறாரா? போட்டோ ஷூட் மற்றும் சைக்ளிங் தான் செய்வார். அண்ணாமலை, பாரத பிரதமர் மோடி போன்ற தலைவர்கள் தமிழ்மொழியின் சிறப்பையும் மாண்பையும் உலக அரங்கில் பேசினால்தான் உண்டு.
அமிர்தமே கிடைத்தாலும் அனைவரும் பகிர்ந்துண்ண வேண்டும். ஆனால் தலைவர் பதவியை மட்டும் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க விட்டோம். அப்படியே வேறு யாருக்காவது கொடுத்தாலும் சில, பல காரணங்களை சொல்லி நாம அந்த கட்சியை விட்டே வெளியேறி விடுவோம். ம்ம் ஊருக்குதான் உபதேசம்.
அறிவாலய அடிமைகளுக்கு அப்படி வயிறு எரிகிறது...
கொத்தடிமையாக இருக்க பழக்கபட்டவர்களுக்கு இது விச்சாயமாகதான் இருக்கும்
சந்திரன் திமுகவை சொல்றார்... இருநூறு வரலையா
ஆனால் தலைவர் பதவியை மட்டும் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க விடமாட்டோம்....ஹி...ஹி...ஹி...கட்டுமர திருட்டு திமுகவில் தலைவர் பதவியை ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க விடமாட்டோம் என்று எழுத தோணவிடாமல் பிற கட்சிகளை பற்றி எழுத விட்டு தொண்டர்களை தலைமுறைக்கும் தயார் செய்திருக்கிறார் பாருங்கள், அங்கு நிற்கிறார் கருணாநிதி. என்ன சந்திரா, சேம் சைடு கோல் போட்டுட்ட போல.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!
தமிழ் மொழி என்பது ஒரு தொடர்புக்கான சாதனம். அப்படி ஒரு இனமே கிடையாது. திராவிட சாக்கடை அரசியலில் நீங்களுமா?
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பாடியது எதற்காக?
மூடநம்பிக்கையை நம்பி அதனைப் பரப்ப?
விவேகானந்தர் மாதிரி ஸ்பீச்
உங்களுக்கே இது ரொம்ப ஓவரா தெரியல?
தமிழினத்தை ஒரு உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டார்கள்
நீ ஏன் பாய் எங்க டாடி குதிருக்குள் இல்லைன்னு ஓடியாற? ஆமா நீ சுத்த தமிழன்னு நம்பிட்டோம்.
விரலை மடக்கிக்கிட்டாங்களா ?
திருக்குறள் பயிற்றுவிக்குமாறு கோரிக்கை வையுங்க. உங்க நேர்மை சூப்பர்.
தனிப்பட்ட திறமை என்பது வேறு மக்கள் செல்வாக்கு என்பது வேறு. அரசியலில் தனிப்பட்ட திறமை ஒரு போதும் கை கொடுக்காது, ஓட்டுக்களாகவும் மாறாது. பல லட்சக்கணக்கில் வாசகர்களை வைத்திருக்கும் மாரிதாஸுக்கும் நூறு ஓட்டுக்கள் கூட கிடைக்காது. சமூக வலைதள பிரபலம் அரசியலுக்கு கை கொடுக்காது. இதெல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சை கேட்டு நடக்கும் மாரிதாஸ் போன்றவர்களுக்கு தெரியாது. அண்ணாமலை போன்றவர்களுக்கு இருப்பது மக்கள் செல்வாக்கு. அதுதான் அரசியலுக்கு தேவை. அண்ணாமலை தேர்தலில் நின்றால் அந்த ஒற்றை நபருக்காக தமிழகமெங்கம் அனைத்து தொகுதிகளிலும் லட்சக்கணக்கில் ஓட்டுக்கள் விழும். இதுதான் தனிப்பட்ட திறமை இருப்பவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு இருப்பவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம். ஹி...ஹி...ஹி...
உண்மை என்ன என்பது தேர்தலில் நின்னதான் தெரியும், நானும் அண்ணாமலை அபிமானித்தான், நீங்கள் சொல்வது போல் ஒட்டு போடும்போது நம்ம ஆளுங்க எதிர் திசையில் போடுவாங்க....
மாரிதாசுக்கும், குரு மூர்த்திக்கும் உங்களது அமெரிக்க உரையில் எதாவது செய்தி இருக்கிறதா? இப்போது எதற்கு அவர்கள் பேச்சு? இப்படித்தான் உங்களுக்கு உள்ளேயே இருந்து கொண்டு சில வியாதிகள் உங்களை படு குழியில் தள்ளப் பார்க்கும். அவர்களிடம் இனி மேலாவது நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தனி மனித ஆளுமை தலைமை பண்புதான் அரசியலுக்கு ஒத்து வரும். நல்லவரோ கெட்டவரோ ஜெயலலிதா மாதிரி வசீகரம் கொண்ட ஆளுமை கொண்ட ஆட்களைத்தான் தமிழக மக்கள் தலைவர்களாக ஏற்க விரும்புவார்கள். நல்லவர்களாக இருந்தாலும் தமிழர்களுக்கு பிடிக்காது. ஒதுக்கிவிடுவார்கள். தேசிய சித்தாந்தம், கொள்கை, கட்சியை விடவும் யாரும் முக்கியம் இல்லை, தேசிய நீரோட்டம், சுழற்சி முறையில் தலைவர் பதவி, எதற்கெடுத்தாலும் தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாத டெல்லி தலைமை முடிவுக்கு காத்திருப்பது இந்த மண்ணாங்கட்டியெல்லாம் தமிழக அரசியலுக்கு ஒத்து வராது.மேலும்
-
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு; விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு
-
மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம்; கவர்னர் அர்லேக்கர் அழைப்பு
-
நீங்கள் வந்து ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலை இல்லை; திமுக மாஜிக்கு செங்கோட்டையன் பதிலடி
-
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கு; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்
-
மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்தது; டில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்
-
லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம்; மனம் இங்கே தான் இருக்கும் என்கிறார் ஸ்டாலின்