த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சம்மன்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக கூறப்படும் வழக்கில், நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு, சென்னை போலீசார் 'சம்மன்' அளித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 45; ஐ.பி.டி.எஸ்., என்ற கருத்துக் கணிப்பு நிறுவனம் மற்றும் 'யூ டியூப் சேனல்' நடத்தி வருகிறார் .
திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோருடன் இணைந்து, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், இவர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ., இளையராஜாவிடம், 35 கோடி ரூபாய் பேரம் பேசியது அம்பலமானது.
விசாரணை இந்த பேரம் குறித்த ஆடியோ வெளியானதுடன், எம்.எல்.ஏ., இளையராஜாவும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
விசாரணை
நடத்திய செ ன்னை திருவல்லிக்கேணி போலீசார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரைச் சேர்ந்த நரேஷ், கரூரைச் சேர்ந்த ரமேஷ், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.
அதை தொடர்ந்து, சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சீனிவாசன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வன், அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, 180 கோடி ரூபாயில் சதித் திட்டம் தீட்டியது தெரியவந் தது. இதன் பின்ன ணியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் இருப்பதாக, கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்தனர் .
அதன்படி, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்கிடம் விசாரணை நடத்த, போலீசார் தேடி வந்தனர். இருவரின் மொபைல் எண்களும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளன. இருவரும் தலைமறைவாகி விட்டதாக, திருவல்லிக்கேணி போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார், கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டி கிராமத்தில் உள்ள செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் பூர்வீக வீட்டிற்கு நேற்று சென்றனர்.
அங்கிருந்த அவர்களது தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் சம்மன் அளித்தனர்.
அதில், இருவரும் நாளை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகாதபட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரும், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க, அவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என்பதை அறிவிக்கும் வகையில், 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரிடமும் தனித்தனியாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படியே, இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில், அவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளோம். கைதானவர்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பதால், அவர்களின் வாக்குமூலங்கள், அவர்களுக்கான தொடர்பை உறுதி செய்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கம்பி கட்டும் கதைகள் முன்னாடி எப்பவோ வரும் ..இப்ப தினசரி..
Scotland யார்ட்க்கு இணையான நம்ம போலீஸ் சால் இவர்களை அருகே கூட நெருங்க முடியாது...ராமஜெயம் கொலை, வேங்கை வயல் கயவன் யார் அந்த சார் இவர்களின் வரிசையில்.....
உழைக்காமல் ...கொள்ளையடித்து ...தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை திட்டம் என்ற பெயரில் கமிஷன் ,லஞ்சம் ...ஊழல் ...செய்து நல்ல சொகுசா வாழுறானுங்க ...
வரிப்பணம் கட்டுன மக்களும் ...ஓட்டுபோட்ட மக்களும் ஒரு வேலை சோத்துக்குக்கு திண்டாடுறாங்க ..
இவனுக மந்திரி ...அமைச்சர் ..என்ற போர்வையில் மறைந்துகொண்டு சொகுசா வாழுறானுங்க ...
இவன் கொள்ளையிடுச்ச சொத்துகளையெல்லாம் பாதுகாக்க அடியாட்கள் இருக்கானுங்க ...வாதாட வக்கீல் இருக்கானுங்க ..காப்பாத்த தலைமை இருக்கானுங்க ...
அப்புறம் ஏன் ? இவனுங்க கவலைப்படவேண்டும் ...
நம்மாளமாதிரி இளிச்சவாயனுக இருக்கும்வரை ..இவனுங்க சொகுசா வாழுறானுங்க ...வாழுவாங்க ..
உண்மைதான் இந்த நாடு நாசமாகத்தான் போகும் இன்னும் மோசமாகத்தான் போகும்
அசோக்குமார் மீது தேடப்பட்டு வந்த ஒரு பழைய செய்தி இருந்ததே ? எதற்காக தேடப்பட்டு வந்தார் என்று உங்களுக்கு யாருக்காவது நினைவு இருக்கா ?
லேசாக நினைவு இருக்கிறது ஆனால் கிட்ட தட்ட இரண்டு வரும் வரை கண்டே பிடிக்க முடியவில்லை ஆனால் எந்தக் கேசு என்று மறந்து போய் விட்டது எம காதகர்கள்
சம்மன் மட்டுமே அனுப்பலாம்! அனுப்பி கிட்டே இருக்கலாம்......... அவர் 2031 இல் மந்திரியாகி நம்மைப் பார்த்து சிரிப்பார்!
திமுக பெயரை மீண்டும் மீண்டும் கெடுக்க நினைக்கும் இவர்களை கட்சியை விட்டு நீங்கி விட வேண்டும்
கட்சியே இவர் தயவில் தான் இயங்குகிறது! முன்னாள் முதல்வர் கட்சிக்கு தலைவர் மட்டுமே! கம்பெனி டைரக்டர் மற்றும் சீப் பைனான்ஸியர் இவர்தான்! ஆக, ஆக, எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது!
திமுக பெயரை இவர்களா கெடுக்கிறார்கள்? அபாண்டமான குற்றச்சாட்டு! முதலில் கட்சிக்கு நல்ல பெயர் இருந்ததா? அந்த வேலையை ஆரம்பம் முதல் செய்வது தலைமை மற்றும் தலைமை குடும்ப உறுப்பினர்கள்தான்! இவர்கள் கலெக்ஷன் ஏஜெண்டுகள் மட்டுமே!
இவர்கள் இருவரும் தப்பி செல்வார்கள் என்று முழுதும் தெரிந்தும் நீதிமன்றமும் சரி இப்போதுள்ள அரசும் சரி இவர்களை முதலிலேயே கைதுசெய்து தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் இனி இவர்களை கண்டுபிடிப்பது என்பது இந்த ஜென்மத்தில் நடக்காது தலைவரே லண்டனில் காணாமல் இருக்கும்போது மற்றும் இன்னொரு அமைச்சரே சிங்கப்பூர் சென்றிருக்கும்போது இவர்கள் இருவரும் ஏன் அயல்நாடு சென்றிருக்கக்கூடாது அப்படியே இங்கே இவர்கள் இங்கே அகப்பட்டாலும் உடனே ஆர்.எஸ்.பாரதி மற்றும் அட்வொகேட் வில்சன் அவர்களின் உதவியால் வெளியே வந்துவிடுவார்கள் இந்த வழக்கு அபேஸ் சும்மா பெயரளவில்தான் இருக்கும்
டயப்பர் புகழ் செபா மற்றும் சகோதரர் தீம்க்கா ஆட்சியில் கோவில் காளை போல சுற்றித்திரிந்தார்கள்... இப்பொழுது எங்கு போனால் தப்பிக்கலாம் என்று இருக்கிறார்கள்.
பப்ளிக்கா பொடி கசக்குன சரத்–க்கு எப்ப சம்மன்?
இதுவரை தவேக போனவர்கள் எல்லாம் யாரிடமென்ன பெற்றார்கள் என்பதெல்லாம்விசாரிக்க வேறு ஒரு யுகம் வர வேண்டும்..தூய சக்தி இவ்வளவு கேவலமான அரசியல் இதுவரை நாம் பார்க்காத ஒன்று..
இரண்டு என்கவுன்டர் செய்தால் கரூர் மாவட்டமே சுத்தமாகும்
.