மின்வாரியம் - ஐஐடி சென்னை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்; அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
சென்னை: உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழக மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மின்சார வாரியம் - ஐஐடி சென்னை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்; தமிழகத்தின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தி, மின் சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில்,மின்சார வாரியம் மற்றும் ஐஐடி சென்னை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம் மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், மின்கட்டமைப்பை மேம்படுத்துதல், செயல்திறனை உயர்த்துதல், செலவினச் சிக்கனத்தை ஏற்படுத்துதல், நிபுணத்துவ தொழில்நுட்ப ஆய்வுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவு , இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு , டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுவழி சார்ந்து முடிவெடுத்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகால ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கிறது.
மேலும், கூட்டு ஆராய்ச்சி, கொள்கை ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள், திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால மின்துறை தேவைகளுக்கான புதிய தீர்வுகளை உருவாக்குவதற்கான நீண்டகால கூட்டாண்மைக்கும் இவ்வொப்பந்தம் வலுவான அடித்தளமாக அமையும். மேலும், இதன்மூலமாக நிலைத்த மற்றும் நீடித்த மின்கட்டமைப்பினை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகம் வழங்க இயலும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு எனும் பெயரால் அனைத்து துறைகளையும் சேதப்படுத்தி விட்டு, இறுதியில், எந்த சமுதாயத்தை கல்வி, வேலைவாய்ப்பில் இடம் தராமல் ஒதுக்கினார்களோ, அவர்கள்தான் இன்றைய கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு தேவைப் படுகிறார்கள். ஒன்றுமட்டும் உண்மை பந்தை தண்ணீரில் அழுத்தினால், அமுங்கிவிடாது. விஸ்வரூப வெற்றி பெறும் என்பதே உண்மை. சிறிய பதவிகளில், அவர்களை ஒதுக்கி வைத்தால், பெரிய பதவிகளை அலங்கரிப்பார்களே தவிர, ஓய்ந்துபோக மாட்டார்கள். அவர்களது வேதம் அவர்களை ஒருபோதும் கைவிடாது.
நல்ல முடிவு நல்ல ஒப்பந்தம் இதுவரை யாருமே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மின்வாரித்தை திறனை உயர்த்த முயற்சியே எடுத்ததே இல்லை இனி எடுக்கப்போவதும் இல்லை இதனால் செலவுகளும் குறையும் புதுப்புதுதிட்டங்களும் அமலில் வரும் இதுமற்ற மாநிலங்களுக்கும் இதை ஓர் எடுத்துக்கட்டாகவே விளையும் அமைச்சரின் முயற்சி விரைவில் நல்ல பலனையே கொடுக்கும்
Please Make it as a Challenge in Local Transmission in Power Distributions NOT IN OVR HEAD at all, All in Under Ground by Cable Trenches with Different Cable Trays HV /LV/ Telephone Cables, Fiber optics Cables, Future extension for Gas pipeline in Separate Trench Distributions even. It will be Extended not only for Cities even in வில்லகேஸ்,This is my Humble request to the Present Rulers. வாயில் வடை சுடும் அரசியல் வியாதிகள் கூரும் வசனத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன், ஜப்பானை பார் ,சிங்கப்பூரை பார்,தமிழ்நாட்டையம் அது மாதிரி மாற்றுகிறேன் கூரி கூறியே இத்தனை வருடங்கள் மக்களை மாற்றி வந்துள்ளனர் என்பது வருந்த தக்கது
It is shame to say that TNEB is One of the most root level corrupted body and even a contract employee is not ready to do his normal job without bribe. It is left to your assumption about permanent employees.
பல இடங்களில், தாழ்வழுத்த மின் பகிர்மான பெட்டிகள், அவற்றின் கதவுகள் திறந்த நிலையில் பராமரிப்பின்றி இருப்பதை காண முடிகிறது. இதனால் அந்த பெட்டிகளின் அருகே விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்து, மேலும் ஆடு, மாடு, பூனை, கோழி, அணில், எலி ஆகியவற்றிற்கும் ஆபத்து. அவ்வாறு கதவுகள் திறக்க நேரிட்டால், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தானாகவே அந்த மின்சார பெட்டிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படுமாறு செய்யலாம். இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த பெட்டிகளின் மேலே ஒட்டப்படும் சுவரோட்டிகளின் பலத்தில் தான் அந்த பெட்டிகள் சாயாமல் நிற்கின்றன.